It கலைமகன் கவிதைகள்: பேய் தேசமும் சிட்டுக் குருவிகளும்

வெள்ளி, 22 மார்ச், 2013

பேய் தேசமும் சிட்டுக் குருவிகளும்


பேய் தேசத்து
பிரேதங்களின்
பின்னிரவு
பிரளயமாய்

உணர்வுகளும்

உரிமைகளும்
பெரும்பான்மையின்
விக்கலுக்கு
விருந்தாகப் பார்க்கிறது

ஜன நாயகம்
விழி பிதிங்கி
மொழி நடுங்கிக் கிடக்கிறது

பழமிருக்க
மலம் தேடும்
காகங்கள் போல

மதவாதம்
மகுடி இசைக்க

சிறுபான்மை எனும்
சிட்டுக் குருவிகள்
பேய் தேசத்தில்

வாழ்ந்தும்
வாழாமலும்

இறந்தும்
இறக்காமலும் !!

பிரகாசக்கவி
எம்.பீ அன்வர் -

1 கருத்து: