It கலைமகன் கவிதைகள்: என் கவிதைகள் குறித்து றியாஸ் குரானாவின் கருத்துரை

திங்கள், 29 ஜூலை, 2013

என் கவிதைகள் குறித்து றியாஸ் குரானாவின் கருத்துரை

அன்பின் பைறுாஸ் நலமா? உங்கள் கவிதைகளைப் படித்தேன். எது நல்ல கவிதை என்பதை கண்டுபிடிப்பதிலும், அதைக்குறித்து பேசுவதிலும் இன்று பல விவாதங்கள் இருக்கின்றன. 

அப்படியான ஒரு சிக்கலுக்கள் நுழைவதற்கு உங்கள் கவிதைகள் காரணமாக இருக்காது.
நமது மரபில் பயின்றுவந்த மிக எளிய கவிதை முறையைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.
அதிகம் பேருக்கு ஒரு பார்வையிலே இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உங்கள் கவிதைகள் அமைந்திருக்கின்றன.

வெவ்வேறு வகைக் கவிதை முறைகளையும் எழுதுவதற்கு முயற்சிக்கலாம். அதனுாடாக பல்வகைக் கவிதைகளுடன் பழகும் ஒருவராக நீங்கள் மாறிவிடலாம். மிக்க அன்புடன் றியாஸ் குரானா
2013/07/29 21:33

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக