It கலைமகன் கவிதைகள்: நீயின்றி வேறில்லையே!

புதன், 14 அக்டோபர், 2015

நீயின்றி வேறில்லையே!

பனி விழுந்தாலும் வெண்டாமரை பாரமாகாதே
பூத்தான் பூத்தாலும் பனித்துளியில் மாற்ற மில்லையே
அருகில் இன்றி தூரே இருந்தாலும் மறவாதே
உன் அந்தச் சிறு இதயத்திற்குத் துன்பம் தரமுடியாதே

சிறைப்பட்ட சிந்தனைகளுக்கோ அளவே இல்லை
நாங்கள் மகிழ்வாய் இருந்த இடங்கள் மறப்பதே இல்லை
ஒருநாளும் போலின்று காதலில் எக்குறையும் இல்லை
என்னதான் கிடைத்தாலும் நீயின்றி ஏதுமில்லை...


இன்றிலும் நாளை நல்லதொருநாள் இல்லாமலில்லை
உன்னிடம் இருக்க எனக்குக் காலம் கழிவதில்லை
வெற்றி கொள்ள நீயன்றி வேறில்லை
என்னதான் கிடைத்தாலும் எனக்கு நீயன்றி ஏதுமில்லை..

சிங்களத்தில் - சத்யஜித் லக்மால்
தமிழில் - கலைமகன் பைரூஸ்
14.10.2015

3 கருத்துகள்: