It கலைமகன் கவிதைகள்: பேடிகளாற்றான் பெண்ணடிமை!

ஞாயிறு, 12 நவம்பர், 2017

பேடிகளாற்றான் பெண்ணடிமை!

(கலி விருத்தம்)
------------------------
ஆண்மையிலா ஆடவனாய் அகிலத்தில் இருந்து
அங்கையின் ஏந்தப்பால் பெண்டிரை தனியராக்கி
ஆண்களொடு கைகுலுக்கி மேனிமினிக்கித் திரிந்திட

ஆரவாரிப்ப திலேதுபயன் பெண்களுக்கடிமை கண்டீர்!

திங்கள்கள் பலபோயும் பெண்டிரைத் தனித்தாக்கி
தம்பாட்டில் சுகந்தான் அனுபவிக்கும் ஆண்மையிலா
மங்கையினும் கடையரான பேடிகளைக் கண்டு
மனதுதான் வேகுதையா நீதிதான் எங்கேயவர்க்கு?

-கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக