நாங்கள் காதலிக்கிறோம்...
எங்கள் முத்தங்களை
எங்கள் ஸ்பரிசங்களைக்
எங்கள்
இனத்தவர்கள்
கண்டுகொள்வதில்லை
மானிடர்களைப் போல...
எங்கள் முத்தங்களைக்
கண்டு
என்னவென்னமோ கற்பனைகள் புனைந்து
பூச்சியங்கள் பலஇட்டு
காட்டுத்தீ பரப்ப
எங்களவர்கள் என்ன
வக்கிரக் கண்களைக் கொண்டவர்களா?
மானிடர்களைப் போல...