It கலைமகன் கவிதைகள்: இழிசெயலை இழிந்துரைத்தேன்!

புதன், 19 செப்டம்பர், 2012

இழிசெயலை இழிந்துரைத்தேன்!

வானும் புவியும் இன்னும் பிறவும்
வடிவாம் தூதரும் மலாயிக்காமாரும்
மீனும் இரவியும் நிலாவும் நீள்
மண்டலத் தேகும் எண்ணிலாதனவும்
மீனென மின்னும் நம்மவர் தூதர்
மகிமைமிகு முஹம்மத் என்பவர்க்காய்
குன்னெனும் சொல்லினால் ஏதும்செயும்
குப்ரை விரும்பா ஏகனவன் படைத்தான்!

படைத்த நீள்புவியினில் முஹம்மதரை
படைப்பில் உயர்ந்தவர் என்றான் இறைவன்
மடைமை மண்டிய மாநிலமீது மாநபி
மாமனிதராய் உதித்திட்டவேளை - புவி
காடையர் செயலொடு விஞ்சியே நின்றது
கருத்தினிற் கொண்ட வள்ளல் முஹம்மது
விடையென நல்லவை நாளும் செப்பி
வல்லான் தூதர் தானெனச் செப்பி நின்றாரே!

குவலயம் போற்றிடும் நல்லவர் எங்கள்
குணக்குன்றாம் முஹம்மது நன்னபிமீது
பாவம் செய்திட்ட பாமரன் செயலினைக்கடிந்து
பாவெழுதிடத் துணிந்தனன் அறியாத்தமிழில்..
தேவலை விட்டுடுவம் என்று விட்டகழ
தவறை உணர்ந்தே செய்திடும் இவன்தவறுயரும்!

குறையிலா நபியில் குறைகள் கண்டிட
கேடுகெட்டான் டெர்ரி ஜோன்ஸ் என்பான்
மறுவிலா நபியின் நாமம் கெடுத்திட
மறுவுடன் தந்தான் திரைப்படம்தானே
கூறுகூறாய் அவனைக் கிழித்து இழிந்த
கடல்தரு வுப்பில் பிசைந்திட நினைக்குதுளம்
பேறாம் நபியை இழிந்ததுடன் மேலும்
பிழையிலை என்றனன் அழிந்தொழிந்துபோக...

உத்தம நபினை இழிந்திடும் படத்தினை
உளம்தெரிந்தும் பார்ப்பவன் அழிந்தனன்
நித்தமும் நேசித்திடும் நல்லார்நபியின்
நேயம்மிக்கார் கிளம்பிடுக அவனை வைதிட
மொத்தமும் இழிவே தந்திடும் படத்தினை
மனுக்குலம் எதிர்க்கணும் - தீப்பொறிபறக்கணும்!
வித்தகன் தானென செய்திடும் அராஜகம்
வித்தைகற்றோர் மற்றோர் தெரியணும்

பொல்லாதவனின் கொடுஞ்செயல் தகர்த்திட
பெருமைநபியின் உம்மத் நாமெலா மென்றாய்
நில்லாத நிலமீது நயவஞ்சன் செயலலழிந்திட
நிலத்தே துன்பம் பலவாய் அவனுள் வந்திட
பொல்லாநோயும் அவனுள் குடிகொள
புவியி்ல் ஏந்துவம் எங்கள் கரங்களை மேலாய்!
சொல்லும் செயலும் நலமே எங்களென்பார்
சொல்லுக இறையிடம் இவனை யழித்திடவே!

நெஞ்சம் வெடிக்குது உளமும் எரியுதுதீயாயெனது
நானிலமீது நல்லார்நபிக்கு செய்ததுரோகமதுஎண்ணி
தஞ்சம் புகுந்திட நினைப்பா னெங்கும் - இறையே
தரணியி லிழிந்தவன் இவனெனக் காட்டு மேலாய்நீ
விஞ்சிடும் தனத்தை வீணாய்வீசி கெட்டானிவன்
விந்தைநபியின் பேரினை யழித்திடச் செய்தனன்
மஞ்சையும் பஞ்சாய் ஆக்கிடும் வல்லானே நீ
மண்ணிலிவனை இழிந்தவனெனக்காட்டு சீராய்!

கரியாமெனப் பிளிரும் தீயரக்கர்கள் அருகே
கரியாவர் தீப்பொறி யொன்று பட்டக்கால்
நரிகள் எலாம் ஒன்றிணைந்து ஊளையிட்டாலும்
நாயகத்தின் நற்குணந்தான் நீங்கிடுமாபாரில்
பேரிறையின் சினம் இன்னும் காணார்புவியில்
போதையால் நிலைதடுமாறுகிறார் அந்தோபாவம்!
குறையிலா நபியில் குற்றம் சேர்த்தவன் கதியில்
குடர்பீய்ந்து மொழியிழந்து போவனே பார்கதியில்!

உளத்தில் நபியின் உண்மைக்காதல் இருப்பாரெவரும்
உண்மைநபியின் உன்னபேருக் கிழிவைச் செய்தவன்க்கு
விளங்காதிருப்பினும் எதிர்ப்பினைக் காட்டிடுகவின்று
வேதமிஸ்லாம் பேருடை உமக்கு நல்லனவாகுமின்று
குளத்து நீரெலாம் குடித்திட முனைந்திடும் மாபாவி
குவலயத்து இழிந்தே யழிந்திட துஆவிரந்திடுகவின்று
நாளும் நல்லன நடக்குமுமக்கு இவன்க்காய் சீறிட
நாயன் நல்லருள் கிட்டும் உமக்கும்!
-இஸ்மாயில் எம். பைரூஸ்


--------------------------------
தடைசெய்! தடை செய்!!
யூரியுப்பே நீ தடைசெய்!!
இறைவன் சாபம் வந்திட முன்னர்
இந்த யூரியுப்பைத் தடை செய்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக