It கலைமகன் கவிதைகள்: வலிக்கிறது எனக்கும்தான் மகளே!

புதன், 28 நவம்பர், 2012

வலிக்கிறது எனக்கும்தான் மகளே!

 கவிதாயினி ஜன்ஸி கபூரின் 'வலிக்கிறது அப்பா!' கவிதைக்கான பதில் கவிதை....


வலிக்கிறது எனக்கும்தான் மகளே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மகளே...........................!

யாழினிலும் குழலினிலும்
அழகிய நாமம்தான்......

ஏன்மகளே....... குத்திக்காட்டுகிறாய்
தப்புமகளே.....
உனது விரக்திக்கு
நான்தான் காரணமா?

அண்டம் பிளக்கும் அணுவைவிட
அபாண்டமாய் நான் வார்த்தைகளை
உதிர்கின்றேனா?
பூச்சியங்கள் போட்டுப் பெரிதாக்கும்
உன்தாயின் உச்சரிப்புக்கள்
நீ கேட்டும்
ஆணாதிக்க வெறி என்கிறாய் என்னில்....!

உண்மைதான்
நீ சொல்வது......
எங்களால்........
உன் வாழ்வு பொய்த்துப்போனது
உண்மைதான்.....!



ஆணாதிக்க வெறிகொண்டவர்கள்
சமூகத்தில் இருக்கலாம் மகளே!
ஆனால்
நீ சொல்வது போல்
ஆணாதிக்க வெறியில்
உன் தாயுடன் நான் நடந்துகொள்ளவில்லை
மாறாக
உன்தாய்தான்.....
எனக்குச் சமனாக அவள்நிற்பதற்கு
எங்கும் உலாவருதற்கு
என்னிடம் விலங்கினை நீக்குக
என்று சொன்னதால்
நான் பதிலாக அறைந்ததால்
நீ
பால்ய பருவங்கள் போய்
பத்தும் பலது ஆசைகள்
சுமந்துள காலம்வரை
ஏங்கிநிற்க வைத்தது மகளே
என் குற்றத்தினாலல்ல
அவள்
கைகேயி வரம் கேட்டதனால்
வந்தவினை மகளே....
அவள் கைகேயியானதால்
வந்த வினை மகளே!

உன் தாயால்
என் பத்தினியால்
அவள் பின்புத்தியினால் வந்தவினையால்
நீ இன்னும் சிரிக்காமல்
சினுங்குவது எனக்குப் புரிகிறது
என் மகளே!

பாழாய்ப் போன எனது சுதந்திரத்திற்காய்
உனையும் - உன்தாயையும்
கடிவாளமிட்டேனா?
இல்லவே இல்லை....
இன்ற நான்
சந்தோசம் தேடி
அலைகடலாக மகளே!
எனது உள்ளம் மரத்துப்போய்
வெறும் சடமாக மட்டுந்தான் நான்!
எனது
நிறமூர்த்தங்கள்கூட
இப்போது நிறம் காட்ட மறுக்கிறது....!

என் கண்ணீரைத் துடைத்துச் செல்லும்
காற்றைக்கூட
நான் சபிக்கிறேன் மகளே!

உன் சந்தோசமிலா
குத்தலான வார்த்தைகள் கண்டு
என் உள்ளம் ஆட்டம் காண்கிறது....
கட்டாற்று நீராய் வழிந்தோடும்
என் இரத்தநீரின்
கரைகாணக்கூட நான் நினைக்கும்
என்னவள்
ஆம்
உன் தாய் வரமறுக்கிறாளே....!

மகளே....
நான் ஆணாதிக்க வெறியனா?
என்னை எப்படியெல்லாம் சொல்கிறாய்
உன்னுடைய கீறல் வார்த்தைகள்
என்னைச் சல்லடையாக்குகின்றன மகளே!

என்னவளுக்கு
அறைய எனக்கு உரிமையில்லையா?
அடித்த கை அணைக்கும் என்பது
பொய்யாக இருக்கிறது .....!

ஏ.... என் மகளே!
என்னை சிலுவையில் அறையாதே!
வலி தாளமுடியவில்லை.....

உன் விதி - என் விதி
யாருக்கும் வரக்கூடாது மகளே!

உன் தாயோடு உள்ள
உனக்கு எங்கே தெரியப்போகிறது
எனது மூச்சுக்காற்றின் வெம்மை?

சிந்தி.... கண்ணீர் சிந்து....
நான் ஆணாதிக்க வெறியனா?

-கலைமகன் பைரூஸ்
2012 / 11/ 28 9:25



கவிதாயினி ஜன்ஸி கபூரின் கவிதையைக் காணச் சொடுக்குங்கள்
http://kavithaini.blogspot.com/2012/11/blog-post_28.html




கருத்துரைகள்:
-------------------------

Loganadan PS 
அருமை
Edward Nadar 
3d mirror ?
Jayakumar Chakkam
onnade moonchi thane eppaditha erukkum.
Ilakkiya Sahi 
thirumbath thirumba waasikkath thoondukirathu....nice poem 
Nizam Farook
 ம்ம்ம் அருமை தாயின் பதில் கவிதை இல்லையா 
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
//என் கண்ணீரைத் துடைத்துச் செல்லும்
காற்றைக்கூட
நான் சபிக்கிறேன் மகளே!//

**** அருமையான படைப்பொன்று!! வாழ்த்துக்கள்!! 

 Sharmila Dharmaseelan 

//உன் தாயால்
என் பத்தினியால்
அவள் பின்புத்தியினால் வந்தவினையால்
நீ இன்னும் சிரிக்காமல்
சினுங்குவது எனக்குப் புரிகிறது
என் மகளே!....// அருமை
kathai sollum paaniyil kavithai nakarvathu mikach chirappu.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக