It கலைமகன் கவிதைகள்: வாழ்த்துரைத்தல் ஆகாதோ? பகர்வீர்

திங்கள், 27 மே, 2013

வாழ்த்துரைத்தல் ஆகாதோ? பகர்வீர்

பணமுண்டு சிலரிடம் குணமுண்டு

பண்பிலை சிலரிடம் பக்குவமுண்டு


மணக்கும் மாண்பதைக்காய் அவர்


மரகதமாய்ப் பாடுவது குறையாமோ?


##########################


நல்லாரைப் போற்றுதல் குறையாமோ?

நவின்றிடும் சொல்லை பழித்தலாமோ?


வில்லெடுத்து தைப்பது போலும் பிறர்


வாழ்த்தீதும் தூற்றுதல் மடைமையே!


##########################


வார்த்தை மட்டுமாகா தென்றுநிதம்


வழிவர செய்தாரையும் தூற்றுதுநிலம்


ஒருவார்த்தையாலே பாரில் வீழச்செய


'ஒருவ'ரினால் ஆமோ மடைமையே!


##########################




சுந்தரத் தமிழ் மொழிகற்று நிதம்


சாந்தமாய் நற்றமிழில் யாத்திடும்பா


முந்தச் செயும் களிப்புறச் செயும்


மற்றவர் வாழ்த்து வார்த்தை மட்டுமோ?


##########################


எல்லாமும் தெரியு மென்பார்க்கு இங்கு


ஏதுதான் சீராய்த் தெரியும் என்பதுசரியே


சொல்லால் வேதனை தருவார்க்கு சதா


சொல்லாமல் வேதனை தான்வருமாமே!


##########################


பண்புடை தாதை இல்லில்லாயின் கிழத்தி


பேதையே வளர்ப்பதும் பேதையே மகவு


குற்றம் காண்பதுவே குவலயத்து ஆயின்


குற்றத்துடனே வாழ்ந்து மடிவ துண்மை!


##########################


பிறர் நெஞ்சத்து வரும் இடுக்கண்காணா


பிறரை எள்ளி நகையாடுதல் தகுமோ?


குறை காண்பதுவே நற்செயலாயின்


குணமிலா தாரின் அறியாமை ஏதென்பேன்?


##########################


பணமிலை யானாலும் பண்பட்ட பாவால்


பண்புடையார் பண்பை போற்றுதல் பண்பே


ஈனச்செயலே பிறரிதயம் புண்படச் செய்தல்


இதய சுத்தியொடு வாழ்தலே பண்பு!


##########################


-மதுராப்புர கலைமகன் பைரூஸ்


26/05/2013 11:03


நன்றி: சுடர்ஒளி 02/06/2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக