It கலைமகன் கவிதைகள்: எமதிலங்கை என்று பாடுவோமே!

புதன், 4 பிப்ரவரி, 2015

எமதிலங்கை என்று பாடுவோமே!


ஸ்ரீலங்கா நமதே... நம் ஸ்ரீலங்கா
சிங்களவர் தமிழர் முஸ்லிம்
நாமிணைந்தே இன்று
சுதந்திர தினம் கொண்டாடுவோமே!

சாதி மதம் பாராது நம் இலங்கை
எல்லோர்க்கும் ஒன்றென்று பாடுவோமே
பாரே வியந்திட நம்மிலங்கை தீவை
ஆச்சர்யம் மிக்கதாய் செய்வோமே!

நமதிலங்கை வளத்தினை பெருக்கிடுவோம்
நமதிலங்கை உயர்ந்திட சேவை செய்வோம்
எமதிலங்கை எமதிலங்கை என்னிலங்கை
என்றே எண்ணிநிற்போம் என்றுமே நாமே!

சுந்தர தீவினை வளம்கொளச் செய்வோமே
சுதந்திர புருஷர்களை போற்றிடுவோமே
சுதந்திர தீவின் தலைமையை ஏற்றிடுவோமே
நீதமாய் என்னிலங்கை என்றிடுவோமே!

பேச்சு மொழி மதச் சுதந்திரம் இலங்கை ஈதில்
எலோர்க்கும் சமஎனும் சமநீதி பேசுவோமே
தென்றல் காற்றாய் இதமாய் அனைவரும்
இணைந்து நிற்போம் இலங்கை நாட்டினிலே!

சுதந்திர தினத்தினில் வாழ்த்துவோம் எம்நாட்டை
பேதங்கள் மறந்து கைகோர்த்து நின்றிடுவோமே
எல்லோர் வாழ்வும் இனிதாய் மலர்ந்திட
இறையை இலங்கை மண்ணினின் வேண்டிடுவோமே!

-கலைமகன் பைரூஸ்
04.02.2015



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக