It கலைமகன் கவிதைகள்: உழைக்கவே நாங்கள்!

ஞாயிறு, 1 மே, 2016

உழைக்கவே நாங்கள்!


உழைப்பாளிகளால் கட்டப்பட்ட
தோரணங்களுடன் கூடிய
பெரிய மேடை அது...

வயிறு ஊதிய பெரிசுகள்
வயிறு கிழியக் கத்தினார்கள்
வயிற்றெரிச்சலுடன்
உழைப்பாளிகள்
ஏன்தான் வந்தோம் என்று....

அடுத்த நாள்

கழற்றியெறியப்பட்ட பந்தல்களும்
அசிங்கங்களும்
உழைப்பாளிக்கு மீண்டுமாய்
உழைக்கவே
அங்குமிங்குமாய் சிதறியிருந்தன...

-கலைமகன் பைரூஸ்
01.05.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக