It கலைமகன் கவிதைகள்: ஒரு துளி விந்தும் பெருமையும்! - கலைமகன் பைரூஸ்

ஞாயிறு, 9 நவம்பர், 2014

ஒரு துளி விந்தும் பெருமையும்! - கலைமகன் பைரூஸ்


இன்று
பகட்டாய் பேசுகிறோம்..
பகட்டுக்காய் அணிகிறோம்...
பிறரைப் பார்த்து
தப்பாய் நினைக்கிறோம்...
நாமே பெரியவர் என்று..



மனமே
எண்ணிப்பார்!

நீ
மலத்தையும் சலத்தையும்
சுமக்கும்
ஓர் இயந்திரம் மட்டுமே..

அவை உன்னில் மட்டும்
நறுமணமா என்ன?

நீ எப்படி
பெருமை கொள்ளவியலும்..
நீ
அசுத்தத்தைச் சுமக்கும்
அசுத்தத் துளியிலிருந்து
தோன்றியவன் அல்லவா?

நீ தூற்றப்படும்
இந்திரத்துளியிலிருந்து
சதைப்பிண்டமாகி இருக்கிறாய்
அவ்வளவுதான்!

பெருமைக்குச்
சொந்தக்காரன்
படைத்தவன் மட்டுமே!

-கலைமகன் பைரூஸ்
08.11.2014 10.36



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக