It கலைமகன் கவிதைகள்: பைந்தமிழாள் என்னுள் வந்துவிடு நீ!

சனி, 29 ஆகஸ்ட், 2015

பைந்தமிழாள் என்னுள் வந்துவிடு நீ!

தமிழ்ச் சிந்து!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிந்துதே உள்ளத்து தேன் தமிழ்
சிந்தை தைக்குதே அன்புச் சரம்
உந்துதே மனமுந்துதே தமிழால்
சிந்தனை பலவாய் ஊறுதே ஈதில்!

சிந்தனை யென்னவோ சிந்து தமிழே
சிந்தனை மீதெனை ஏற்றினை நலமே
உந்தன் நினைவினில் ஆடினேன் நானே
உந்த னன்பினில் உனைச் சுவைப்பேன்!
ஜாதி மதத்தினா லுனைப் பிரிந்து
ஜாதிகள் பேசலாமோ சிந்து நீ
போதை யாலுனில் சிந்தித் தோதுவேன்
பைந்தமி ழெனக்குள் வந்திடு நீ!
-கலைமகன் பைரூஸ்29.08.2015


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக