It கலைமகன் கவிதைகள்: துயராடும் ஆசான்கள்!

சனி, 10 டிசம்பர், 2016

துயராடும் ஆசான்கள்!

தூண்டிலி லகப்படு மீன்களடா நாம் தொண்டு செய்திடு மாசான்களடா உண்டு களித்திட வொருவேளையேனும் வலியவர் கரங்கட்குள் சிக்கினோமடா... உச்சாணி யேறிட வுதவிடு மேணிகளடா
உயரவேறிய பின் உதைபடும் சனங்களடா எச்சரிக்கை களெலாமே எமக்கட - மேலிட ஏச்சுப்பேச்சுக்களும் எம்மவர்க்கடா... கிடைத்திடு மூதியம் கடன்கள் தீர்த்திடடா கணக்கிலா கடமைகள் இல்லத்தி லேங்குதடா விடைகாணாக் கனவுகள் பெருகுதடா நாளும் விண்ணை நோக்கியே பெருமூச்சு பெருகுதடா நாளும் பெருகும் ஏற்றங்களடா எம்மில் நாணிக்குறுகுது நாளங்களடா எம்மில் ஆளும் வர்க்கத்தின் சேதிகளடா துன்பியல் ஆரத்தழுவிட செய்கிறதடா - சூன்யமாயிங்கு ---------------------- (கலைமகன் பைரூஸ்) 10-12-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக