It கலைமகன் கவிதைகள்: ஆணா இல்லை பேடியா இவன்?

சனி, 10 டிசம்பர், 2016

ஆணா இல்லை பேடியா இவன்?

நீள்கரு முகிலன்ன சிகையொடு ஒருவன்
நில்லாது தள்ளாடி வரக்கண்டேன் அவன்
நீள்புருவங்க ளுயர்த்தி கடுக்கண் ணிட்டு
நிலத்தினில் பேதையாய் வரக் கண்டேன்

கண்டேன் அவனாணோ இலை பேதையோ
கருத்தினி லுன்ன வியலவிலை போயும்
கண்களை அகலத்திறந்து நோக்கிடவே ஐயோ
கோலம்செய் யவன் பேடியே என்றுன்னினேன்


உன்னியவை யாவும் உண்மையிலை என்று
உரசியுரசி வரக்கண்டேன் தாள்களில்மெட்டி
மின்னமின்ன அப்பேதையவன் ஜாடைஐயோ
மனதிற்குள் ஐயந்தந்தது பாரிதுவாவென்றே

பாரிதுவாவென்றே பாவடித்திட்டாலும் நான்
பாரினி லுலாவரும் கன்னியரன்ன ஆடவர்
நேரிலாதன புரிந்து வந்திடவே பாலினம்
பெருமை யிழந்து விகாரமாயிடுமே ஐயோ!

(கலைமகன் பைரூஸ்) 08.12.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக