It கலைமகன் கவிதைகள்: இதக் கொஞ்சம் யோசி மச்சான்! - கலைமகன் பைரூஸ்

புதன், 13 செப்டம்பர், 2017

இதக் கொஞ்சம் யோசி மச்சான்! - கலைமகன் பைரூஸ்

கைகள் கரகட்ட வர
உடுப்பெல்லாம் ஊத்தபட
ஸுப்ஹிலேயே
யாவரத்துக்கு போரமச்சான்....
நான் சொல்றதக் கொஞ்சம்
கேளுமச்சான்....
அல்லா ரஸுல மறந்து
நாடுகாட்டுக்கு நீங்க போயி
ஆயிரங்கள் பல தேடியுந்தான்
என்னதான் கிழிக்கப்போற...
கோவம் புடிக்கவாணம் மச்சான்
நான் சொல்றதக் கொஞ்சம்
நிண்ணு நீ கேளுமச்சான்...

கோடிக்கணக்கா பணம்சேத்தாலும்
பொம்பிளக்கி நக வாங்கினாலும்
பல மாடிவீடு கட்டினாலும்
ஆறடி நிலமே ஒனக்கு
நிச்சயமா கெடக்கிம் மச்சான்...
கைகள் கரகட்ட வர
உடுப்பெல்லாம் ஊத்தபட
ஸுப்ஹிலேயே
யாவரத்துக்கு போரமச்சான்....
நான் சொல்றதக் கொஞ்சம்
கேளுமச்சான்....
புள்ளகுட்டி நல்லா ஈக்கோணுமெண்டு
ஊருக்குள்ள நல்லா வாழ வேணுமெண்டு
படாதபாடு படுகிற மச்சான்
நான் சொல்றதக் கொஞ்சம் கேளுமச்சான்...
ஒங்களத் தொழ வெக்க முன்னம்
நீங்க தொழணும் இம்மயில...
ஒங்கள தொழ வெக்க முன்னம்
நீங்க ஸதகா ஸகாத் குடுக்கஓணும்
ஒங்கள தொழ வெக்க முன்னம்
நீங்க ஹஜ்ஜுக்கு போக ஓணும்
ஒங்களுக்கு நானுமெப்போ
துஆத்தான் கேக்குறன் ஏண்ட மச்சான்...
தொழாதவனுக்கு இஸ்லாத்தில பங்கு இல்ல
தொழாம மார்க்கம் பேசி பயனுமில்ல
என் அன்பான தங்க மச்சான்
ஸுப்ஹுத் தொழுது யாவரம் போங்கோ...
ஸுப்ஹுத் தொழுது யாவரம் செய்ங்கோ...
கைகள் கரகட்ட வர
உடுப்பெல்லாம் ஊத்தபட
ஸுப்ஹிலேயே
யாவரத்துக்கு போரமச்சான்....
நான் சொல்றதக் கொஞ்சம்
கேளுமச்சான்....
ஒங்களப்பாத்து புளகுட்டி வளரஓணும்
ஒங்கட எங்கட புள்ள நல்லா வரோணும்
அதுக்காக நாங்க மச்சான்
ஸொபஹிலிருந்தேனும் தொழுவம் மச்சான்
மனம் நோகச் சொல்ல இல்ல...
நான் தொழுறன் எண்டு சொல்ல இல்ல...
பெரியமனிசன் நானும் இல்ல...
நாங்க சொர்க்கம் போகஓணும்...
அன்பான ஏண்ட மச்சான்
அன்பான எங்கட மச்சான்...
அல்லாவ மறந்து போடாதுங்கோ...
ஒங்கள எங்கள நாங்க மாத்திக்குவம்...
ஸலாம் சொல்லி முடிச்சன் மச்சான்
அல்லாவ கல்பில கொள்ளும் மச்சான்
கப்றில நிம்மதியா இருக்க மச்சான்....
-தமிழன்புடன்,
இஸ்மாயில் எம். பைரூஸ்(கலைமகன்)
13.09.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக