It கலைமகன் கவிதைகள்: துணிந்தெழுந்த தகையே பாரதியே!

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

துணிந்தெழுந்த தகையே பாரதியே!

நல்லபல கவிகள் நெய்தே - அவை
நானிலத்தில் வாழ்ந்திடச் செய்தீரையா!
சொல்லுங்கள் பாரதி - உமைப்
போலக்கவி நெய்தவருண்டா ?
இளமையில் கவிபுனைந்தவருண்டா?
தவறுகள் கண்டு கரங்கள் கட்டிநின்றார் பதியில்
தட்டியெழுப்பி வீறுகொண்டிடச் செய்தனை
துணிந்தே எழுந்தீர் தகையிலாதாரை
பணிந்திட பண்பாயும் அக்கினியாய் எழுந்தும்
உம்படைப்பாயுதங்களால் நிமிர்த்தினீரையா!

`````````````````````````````````````````

விசையுறு கவிகள் செய்தீரையா - பாரதிநீரே
விலங்கிடப்பட்ட மாதர்க்கு விடுதலையும்
நாதியற்றோர் எழுந்திட ஏற்றமாய்பலவும்
தெய்வத்தின்மீது மக்கள் பற்றுவைத்திடவும்
குழந்தைத் திருமணம் ஒழிந்திடவும் அஃதன்ன
பெண்கள் வித்தைபல கற்றிட ஆடவர்க்கு
சரிநிகர்சமமென பெண்கள் எழுவதற்கும்
தட்டிய உம்பறைபோல முரசம் யாரிடமுண்டு?


`````````````````````````````````````````

கவிதை எல்லோரிடத்தும் சென்றிடத்
தாங்கள் தந்த கவிதைகள் புதுக்கவிக்குழந்தைகள்தானே!
பாவை ரதியினில் சீராய் ஓட்டிய - பாரதிநீரே
சந்தமும் எளிமையும் ஜனங்கள் விரும்பிடும்
மெட்டுடை பாட்டுகள் இன்றும் வாழுதையா!
நரமாமிசவுண்ணிகள் நிறைபாரினில் இன்று
நின்றின்றிருந்தால் நீங்கள் முட்டியிருப்பீர்
நானிலத்தில் நிலைகொளாதிருக்க கவிபல நீர்
நலமாய்த்தான் புனைந்திருப்பீர்...
தமிழ்வாழுங் காலமெலாம் வாழவுள நம்கவியே
தந்தேன் கவியறியதான் உம்வழிக்கவியில் உமையே!


`````````````````````````````````````````

-தமிழன்புடன்,

மதுராப்புர கலைமகன் பைரூஸ்
12.09.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக