It கலைமகன் கவிதைகள்: பிணந்தின்னும் கழுகுகள்...

வெள்ளி, 21 மார்ச், 2014

பிணந்தின்னும் கழுகுகள்...

பச்சையும்
நீலமும் 
சிவப்பும்
பச்சோந்தியாய்...

பிணந்தின்னும்
கழுகுகளும்
ஊளைகளுக்குப் பயந்து
நாட்டை விட்டே
புலம் பெயர்கின்றன...


வாக்குறுதிகள்
கேட்டுக் கேட்டு
வக்கில்லா
உறுதிகள் இவை என
மக்கள்
மனதால் வெறுத்துக்கொண்டே
ஒப்பாரியைக்
கேட்கின்றனர்...

போனவுடன்
பிணந்தின்னிகள்
இவை என
நச்சரிக்கின்றனர்
உச்சரிப்புடன்....

விடியல் காணாமல்
மக்கள்
வீணாக மார்தட்டுகின்றனர்
விடியல் உண்டென
சிலர்
விசுவாசிக்கின்றனர்...

நானோ...
சீச்சீ.. இப்படியுமா
என்கிறேன்...!

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்20032014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக