It கலைமகன் கவிதைகள்: ஞாயிறு மறையாது! (பாடல்)

ஞாயிறு, 9 மார்ச், 2014

ஞாயிறு மறையாது! (பாடல்)


ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது…

குழந்தை எனக்குள் ஞாயிறு
தாயு மெனக்குள் ஞாயிறு
குழந்தை மொழியாள் ஞாயிறு
குவலய மெங்ஙனும் ஞாயிறு

ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது….

தீந்தமிழ் எனக்குள் ஞாயிறு
தித்திக்கும் முத்தமிழ் ஞாயிறு
சுந்தர மனத்தாள் ஞாயிறு
கவிதை பொருள்கள் ஞாயிறு

ஞாயிறு மறையாது
ஞாயிறு மறையாது
நாயன் நினையாமல்
ஞாயிறு மறையாது….

நல்லன நினைத்திட ஞாயிறு
நலமாம் பணியிடை ஞாயிறு
இல்லாள் நல்லாள் ஞாயிறு
இனிது வளர்ந்திடு ஞாயிறு..

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

09-03-214

(தயவுசெய்து முடியுமானவர்கள் இதனைப் பாடலாக பாடியனுப்பவும். ismailmfairooz@gmail.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக