It கலைமகன் கவிதைகள்: எளியாரை வலியார் உதைப்பது தகுமோ?

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

எளியாரை வலியார் உதைப்பது தகுமோ?




எளியாரைக் காணுங்கால்
எடுப்பாய் நிற்பான்!
எடுப்பாம் சக்தியை
ஏற்றியே காட்டுவான்!
வலியவன் நானென்பான்!


வலியவன் ஒருவன்
வருங்கால் கைகூப்பி
வணங்கியே நிற்பான்!
வடிந்திடும் அவனுக்கு
மறைவிட நீராறாய்…!

எளியவரை என்றும்
எடுப்பார் கைப்பிள்ளையாய்
காணலாமோ - வல்லவனுக்கு
வல்லவன் வையகத்தில்
உண்டென்ப தறியாது
வீராப்பு காட்டுவதிலேது பயன்?

------------------------------------
(வேறு)


அபாயாவுக்கு
எதிராய் பலத்தைக் காட்டி
கைகூப்பினான்
விபச்சாரம் வாழ்கவென!

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்    
2014-04-27

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக