It கலைமகன் கவிதைகள்: எமைப் பிரிக்க யாரால் இயலும்?

வெள்ளி, 25 மார்ச், 2016

எமைப் பிரிக்க யாரால் இயலும்?


முழு நிலவு தனியாய் வானில்
ஒளிருது உனைப்போல…
தூரத்தில் விண்மீனொன்று சிரிக்குது
எனைப் போல் இரகசியமாய்…
தடிநாயொன்று குரைக்குது
எங்களிருவருக்கும்
உன் அண்ணனைப் போல்…
ஒருநாளும் அதனால் முடியாது
குரைப்பது போல்…
எங்களிருவரையும் கடிப்பதற்கு…
கலைமகன் பைரூஸ்
22.03.2016

-------------------------------------------------------------------------------------------------------------
உலக கவிதை தினம் கொழும்பு 07 தாமரைத் தடாகத்தில் நடந்தேறியதன் பின்னர் நண்பன் நாச்சியாதீவு பர்வீன், காவ்யாபிமானி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பன்முக ஆளுமை கலைவாதி கலீல், விவாகப் பதிவாளரும் கவிஞருமான வதிரி சீ. ரவீந்திரன், கவிஞர் மௌலவி காத்தான்குடி பௌஸ் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட படங்கள் கீழே...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக