It It கலைமகன் ஆக்கங்கள்: ஆகஸ்ட் 2012 Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 25 ஆகஸ்ட், 2012

என்கவிபோல் உன்கவியும் வருக!


ஆரவாரமேதுமின்றி நின்றாள் ஒரு சகி!
ஆழ்ந்து படிப்பதன்றி வேறிலை அவளில்
நேராகப் படித்தாள் பலபோழ்து கவிகள்
நேசித்தாள் கவிதைக்காதலனை இவள்!

தேடினாள் அவன்திருவுரு எங்ஙனும்
தோய்ந்தாள் முகநூலில் எங்ஙனும்
நாடித்தான் பிடித்தாள் அவன்யாரென
நலமாம் காதல் மேகமாய் ஓடின....!



















--------------------------------------------

(வா)சகி.....!
-----------------

தமிழைத்தான் நேசித்தேன் நிறைவாக
தரமான கவிதைதான் நேசித்தேன்
உமிநீங்கிய அரிசியென இருந்ததை
உரமாக வைத்தேதான் நேசித்தேன்!

குணமான நற்கவிதை நாளுந்தான்நீர்
குவலயமே போற்றுதற்காய் தந்தீர்
மணமாக என்றுந்தான் என்னுள்
மங்காத புதுஉறவாய் வந்ததுகாண்!

சொல்லெலாம் தேன்சொட்டாய் வந்ததே
சொலவியலா இன்பந்தான் கண்டேன்
சொல்லெல்லாம் உனதான கவியாச்சு
சொர்க்கந்தான் கண்டேன் நானேபோச்சு!

பைந்தமிழின் காதல்க்கும் நீளுகின்ற
பண்பான சொற்களுக்குமாய் நின்று
தந்தேன் மனதெலாம் உன்கவிக்கு
தருவாய்நீ உன்“கவிகள்” எனக்கான!

சந்தித்த கவிதைக்கு காதலியான்
சுந்தரமாய் சேர்ந்திடத்தான் வேண்டும்
நிந்திக்க வேண்டாமே எனைநீ
நிறைவான கவிதைதா எனக்கு!

சொல்புதிதாய் சுவைபுதியாய் உளதாய்
சொல்வல்லான் நீஇணைய வேண்டும்!
சொல்லிடுவர் நீரொடு நீரிணைந்ததென
சொக்கிப்போவே யுன்னுடனே - கவியுடனே!

பேதையரை பண்பாகப் பார்க்கின்றாய்
பேதைமைக் குணத்தை நீயழிக்கின்றாய்!
நாதியிலா நல்லவர்க்காய் ஏங்குகின்றாய்
நாடுகிறேன் உனை நானும் எழுத்துக்காய்!

நாடுகின்ற எனைநான் சொல்வேன்பா
நீஎழுது எனக்கென ஒருபாத்தானும்பா
சூடாக விருந்தாலும் அதுகாணும்
சுந்தரமாய் உனையேற்பேன் கவிதைக்காய்!

கவிஞன்!
--------------

வாசகிபல்லோரில் நீயொருத்தி
வாசம்தான் தந்தது உன்னெழுத்து
நேசித்தேன் உன்னெழுத்தை கவியாய்
நீயுமல்லோ நற்கவிதாயினி என்பேனே!

கற்றிட்டாய் கவிதைகள் பலவாய்
காரிகை நீ அறியாமல் ஆனாய்கவி
பெற்றிட்ட நற்றோழி நீயல்லோசகி
பேருற்றேன் உன்காதல் மொழியுற்று!

சுந்தரமாம் நற்றமிழின் காதலினால்
சுவைக்கின்றாய் எனையெலாம் சீராய்
தந்தேன் நானுந்தான் கவியுன்பால்
தருவாய் நீயுந்தான் கவித்தேன்நாட!

தேடுகின்ற நல்லுளங்கள் வாராதே
தெளிவின்றி இருந்தாயோ சீறாதே!
நாடுகின்ற நானல்லோ உன்னீர்ப்பு
நாட மேலுந்தருவேன் கவியேநான்!

என்கவிகண்டு காண்கின்றாய் கனவு
எனதான கவிதைக்கு அரவணைப்பு
புன்னகையும் பரந்துவரும் சுரந்து
பேதைமனம் இதுவல்லோ - நினைப்பு!

சீரான நற்கவிகள் நீயுந்தான் தாவெமக்கு
சீதளமாய உன்கவிகள் யான்கண்டு
மாறாத உளத்தவனாய் காண்பேன்நான்
மங்காத என்கவிபோல் உன்கவியும்வருக!

உன்னைப் போற்றுதற்கே கவிதருவேன்
உன்னிலை நின்று எழுதிடுவேன் கவிநான்
இன்பந்தான் விளையும் இணைந்திருக்க
இறைதுணை வருமாயின் பிணைப்பே!

கவிதைக்குச் சகியல்ல கவிதாயினி
கவிகாண்பேன் காதலிப்பேன் உன்கவி
நோவாமல் சொல்கின்றேன் பண்பாக
நேராக வந்து எனைப்பேசு வருவேன்!

சீரழிந்த சீதனமெல்லாம் எதற்கு
சிந்தைதெளி நல்லியல்பாள் நீயல்லோசகி
பேரான நற்றொழில் நான்பெற்று
பேதையுனை கரம்பிடிப்பேன் தெளி!

----------------------
- மதுராப்புர
கலைமகன் பைருஸ்
2012 - 08 - 24

புதன், 22 ஆகஸ்ட், 2012

எனக்காக ஒருமணி நேரம்! | கலைமகன் பைரூஸ்


“அப்பா
வணக்கம்”

“மகளா?
வணக்கம்!”

“அப்பா
சின்னமகள்
பேசுகிறேன்
சுகமாக இருக்கிறீரா?
பணி எப்படியோ?
உங்கள் 
மேலாளர்
எப்படியோ?

அப்பா!
உங்கள் செல்லமகள்
பேசுகிறேன்!

அப்பா
ஆயிரங்கள் பல
தேடுறீங்களே!
அழகாக உடுக்கிறீங்களா?
உடம்பை
பார்த்துக்கொள்ளுங்கப்பா?

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

புலவோரைப் போற்றுகிறேன்!

உருவகங்களால் செதுக்கி
உயர்கவிகள்தரும்
உயர்கலைச் சிற்பி!
-----------------------------




அறிவொடு பண்பும் உள்ள
அமைதியும் கொண்ட நல்லோன்!
இறையொரு வனின் மாண்பை
இனிதெனச் சுவைத்திடும் வல்லோன்!
நறுக்கென நயந்திடும் கவிதந்து
நலமாய உருவகம் பொழிவான்!
பிறவழிச் செல்லாதே தமக்கென
பாவளம் கொண்ட கவியோன்!
மறைவழி நின்று மேலும்
மாண்புறு கவிதை தருவானோ?

-தமிழன்புடன்
கலைமகன் பைரூஸ்

பாவரசிக்குப்பா!
----------------------

























பாவுக்காப் பாவரசி நாமங்கொள்
பைந்தமிழ்க் காதலி - கலைமகள்
நோவாதே யுளங்கள் பார்ப்பாள்
நேசித்திடுவாள் மனிதத்தைநிதம்!

ஆற்றலுள ஹிதாயா ஈழந்தன்னில்
அழியாத பேருடையாள் - நிலைத்தாள்
போற்றுவம் புகழ்கோக்க பாரில்
பைந்தமி ழணங்குடன் வாழ!

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்
21-08-2012 10:55





வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

எல்லோரும் கொண்டாடுவோம்


விண்முகட்டில் வீழ்ந்து கிடக்கும்
வெண்ணிலாக் கீறலொன்று........
கார்க் கொன்றல் மிரட்டல் கண்டும்
சிரிக்கும் லேசாய் மெல்ல
ஷவ்வல் பிறையாகி!

நால் திங்கள் நடைபயில........
நூலிடையாய் "ஷவ்வல்" எட்டிப்பார்க்க.........
வேலியிட்டுத் தடுத்த உண்ணலும் பருகலும்
இறையாணையால் மீளெழுந்து எமை நோக்க
மறைந்துதான் போகும் நோன்பும்
மாண்பு பல தந்துவிட்டே!

நோன்புச்சாலை வழியோரம்
சிதறி வீழ்ந்த நம் தவறு.....!
கதறியழுதே துடித்திடுகையில்!
எமைக் காக்கும் கேடயமாய்
தழுவிக் கிடக்கும் "பித்ர் தர்மம்" !

உதரத் தசையீரங்களில்
உலர்ந்து கிடக்கும் ஆகாரங்களும்............
தொண்டையோர வெளிதனில்
வற்றிக் கிடக்கும் நீர்ச்சுணைகளும்.......
மீண்டும் சிலிர்த்துத்தான் தளிர்த்திடவே
வந்துவிடும் "ஈதுல் பித்ர் "நம்மருகே!

வறுமை கொண்ட ஆத்மாக்கள்
உருக்குலைந்தே வீழ்ந்து கிடக்கையில்.....
வசந்தமாய் எம் "ஸதக்கத்துல் பித்ர்" - அவர்க்கே
சுகந்தத்தை மெல்ல நெருடிக் கொடுக்க
பேதம் துறந்து புன்னகைக்க பெருநாளும்
வாசம் வீசி வந்திடுமே!

சாமம் கடந்து பொழுதும் புலர்ந்து
ஆதவன் மெல்ல வானேறுகையில்........
தென்றலின் நலனோம்பலும்
முன்றல் வந்து எட்டிப் பார்க்க .....
வெட்ட வெளிகளும் மடி தந்திடும்
அல்லாஹ்வைத் துதித்திடும் பள்ளிகளாய்......

நல்லமல்கள் செய்தோர் தம்
பேதமை துறந்து தக்பீர் முழக்கிட ..................
வல்லோன் புகழ் வசனங்களில்
எல்லோர் வார்த்தைகளும் உறைந்தே கிடந்திட
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம்!

"இரண்டு ரக்அத்தில்" இறைவன் இறைஞ்சி.............
மறைவேதமாம் திருக்குர்ஆனுமோதி - நம்
மூச்சுக்காற்றிலே பரக்கத்தைச் சுமந்து.....
முழு வாழ்வுமே ஒளியினைப் பொருத்த
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம் !

புத்தாடையும் பெருநாள் காசும்
புளாங்கிதமாயுண்ணும் பலகாரங்களும்..........
உறவுகளின் சந்தோஷிப்புக்களும்
இறைவனின் அருள் மணமும் - எம்
இல்லங்களை நிறைத்திடவே
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம் !!

ஈகைத் திருநாளில் கறையிடரகற்றி
உள்ளமதை உவப்பேற்றி....................
பாசத்துடன் எமைத் தரிப்போருக்கே
தேன் சுவை விருந்தும் பரிமாற....
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம் !!

உறவுகளின் வாழ்த்துச் சரத்தில் - எம்
மனைகளும் பூத்துச் செழித்திட
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம் - தன்
சிறப்பை தரணிக்குணர்த்தியே

- ஜன்ஸி கபூர்

//என்னைச் சூழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், நட்பினருக்கும் எனதினிய நோன்புப் பெருநாள் (முன்கூட்டிய ) வாழ்த்துக்கள்//

ஈத் முபாரக்!






வியாழன், 16 ஆகஸ்ட், 2012

வீழமாட்டானோ படுபாவி!



அகவை ஆறுமட்டுமே ஆன
அன்புக் குழந்தை அஃப்ரா
சீராய் ஆடிப்பாடி யிருந்தாளே
சுந்தரமாய்ப் பேசி நின்றாளே!
குழந்தை மொழியினில்
எத்துணை ஆசைகள் பெற்றோரில்!
ஆயினும்......

கொடுமை செய்வதில்
வில்லங்கம் செய்வதில்
மிட்டாயில் ஆசைகாட்டி
பூக்கள் தருவதில்
ஆசைகாட்டி
கபோதிஇவன்
செய்திட்ட கொடுமை
“கல்புகள்” துடித்திட
இரத்தக் கண்ணீர்வடித்திட
செய்கிறதே பாருங்கள்!

சின்னக்குழந்தை
புன்னகை பூப்பதும்
போலிஅன்பு காட்டுதலில்
மதிமயங்குதலும்
இல்லையா
சொல்லுங்கள்?

நான் என்றால்கூட
நிதனமாய்
பதில்சொல்லத்தெரியாத
பிஞ்சுமனத்தை
பூப்பறித்துத் தருகிறேன்
நீவாவென்று
பூவான அவளை
பிஞ்சு அப்ராவை
அழைத்துச்சொன்றானே
படுபாவி இவன்!
“கலாகத்ர்”
என்றுமட்டும் இவனை
விட்டுவிட்டால்
நாய்கள் நிறையவே
குரைக்கும்!


இன்று இந்தப்பிஞ்சு
நாளை...
நமதான
இளம்யுவதிகள்
தாய்மார்கள்
அளவிலாமல்
பேடிகளால்
மந்தபுத்திஎன்றும்
உளநோயாளிஎன்றும்
பேர்சூடிக்கொண்டு
வதைசெய்யப்படலாம்
சரியா?

தேனொழுகப் பேசி
தேள்போலக் கொட்டும்
இந்த விசமிபோலும்
இடுகாட்டுநரிகளின்
ஊளையடக்க
எழுந்திட வேண்டாமோ?

என்ன பாவம்
இந்தப் பிஞ்சுள்ளம்
செய்தது?
நெஞ்சுவெடிக்கிறது....!
“இவன்செய்த
தகாத கொடுமைக்கு
சட்டம் நிச்சயம்
தண்டனை கொடுக்கும்”
இது நகைப்பானகூற்று!
வந்துடுவான் இவன்
நாசமாப்போவ
மீண்டும்
பித்துஎனச்சொல்லி
எத்தனையோ
பிள்ளைகளைச் சாய்க்க....!
கறுப்புத் துணிகட்டிய
நீதியின் கண்கள்
நீதியாக
அநீதிசெய்தவனை
கழுமரத்தில் ஏற்றுமா?
விடைகாணாமல்
ஆயிரமாயிரம்
வாய்கள் முணுமுணுக்கின்றன!

பேசாமடந்தைகளாக
விழிபதுங்கி நாமிருந்தால்
கற்பனைகள் சுமக்கும்நாம்
விகற்பங்களாகத் திரிவோம்!
எமது தார்மீக சட்டம்
இந்த “நல்ல“ நாட்டில்
ஒருபோதும்
உச்சாணியில் ஏறாது!

நமது தலைகள்
பம்மாத்துப் பேசுவதிலும்
கைகள் கூப்புதலிலுமே
நாளாந்தம் இருப்பதால்
எக்கேடுகெட்டாலும்
சும்மாதான் நிற்கும்!
வெறும் வீராப்புமட்டும்தான்
நம் ஆண்களுக்குள்
சேலை மிகப்பொருத்தம்!!

சின்னஞ்சிறு உருவம்
இப்போதும்
மனக்கண்களுக்குள்
கண்ணீரை
ஆறாய்த் தள்ளுகிறது!
இந்த
தரங்கெட்டானின்
ஈனச்செயல் எண்ணி
இவனை
சாயத்திடத்துடிக்கிறத!

பிஞ்சுமனமாய்
எங்கள் மனம்
வேதனையால்துடிக்கும்போது
அவன்மட்டும்
ஒய்யாரமாய்த்தான்
அங்கிருப்பான்!

இனியேனும்
நமது அஃப்ராக்கள்
எனதான அஃப்ராவாக
எனது கண்மணியாக
வலம்வர
தனித்துவத்துடன்
இருக்க வேண்டாமோ?
கிளிப்பிள்ளைகளுக்கும்
கெட்டாரை
ஒட்டவேண்டாமென்று
கர்ப்பத்திலேயே வைத்து
சொல்லிக்கொடுங்கள்!
பெண்புத்தி பின்புத்திஎன்று
சொல்லிச்சொல்லி
வைத்தது இனிப்போதும்!!

மனநோயாளியாவது
மண்ணாங்கட்டியாவது
பெண்பித்துதான் இவனுக்கு
மானமில்லாத பேடி!
இவன்போன்ற பேடிகளில்
ஈனச் செயலிலிருந்து
முத்திபெற
“பெண்பிள்ளைகளுக்கு
சமூகப்பால் ஊட்டுங்கள்!
இல்லாவிட்டால்
என்றும்
வேதாளம் முருங்கைமரத்தில்
ஏறும் கதைதான் நிகழும்”

இறைவா!
இந்தப் பிஞ்சுஉள்ளம்
மேலான சுவர்க்கத்தில்நுழைய
கருணைசெய்வாயாக!
இந்தநரகாசுரனுக்கு
விரைவிலேயே
நல்லபாடம் நீ கற்பிப்பாயாக!
நீயே அனைத்தும்
நன்கறிந்தவன்!


-கலைமகன் பைரூஸ்

(வெலிகம கோட்டகொடை பாத்திமா அஃப்ரா (6) என்ற சிறுமியை மண்வெட்டியால் வெட்டிச் சாய்த்த பாதகனின் நிழற்படம் கீழேஉள்ளது.)




கருத்துரைகள்

Seyed Hussain 
சோகத்தை சொல்லும் கவிதையல்ல இது .மனதை உலுக்கும் கவிதை. இந்ததக் கோரச் சம்பவத்தை அழகாக சித்தரித்துளீர்கள். நீதியும் ,நியாயமும், சட்டமும் , ஒழுங்கும் அவர்கள் கைகளில் இருக்கின்றது. அநீதிக்கு நீதிமுலாம்
பூசும் அவர்களது கைங்கரியம் ஒருநாள் மடிந்தே தீரும்.
18-08-2012

Vinothan Rasamanikkam 
அருமையான் உருக்கமான வரிகள்.....
19-08-2012



வருக ஈகைத் திருநாளே!

மலரவுள்ள ஈகைத் திருநாள் அனைத்து உள்ளங்களுக்கும் இன்பம் நல்கிட எனது பிரார்த்தனைகள்!



திங்களொன்று நோன்பு நோற்று
தராவீஹ் தஸ்பீஹ் முறையாய்செய்து
இங்கிதமாய் சுற்றத்தொடு சேர்ந்தமர்ந்து
இனிதாய் இப்தார் செய்திட்டோமே!

அதிகாலை துயிலெழுந்து தொழுது
அன்பாய்க்கூடி ஸஹர்செய்து – பின்
கதிமிகதந்திடும் ஸுப்ஹும் தொழுது
குர்ஆன் ஓதிட்டோமே திங்களிதில்!

செய்த தவறுக்காய் தேம்பியழுது –நம்
தேகமெங்கும் சேர்ந்திட்ட பவக்கரைநீங்கிட
பெய்யும் மழையாய் அருள்தனைவேண்டி
படைத்தவனிடம் ஏந்தினோமே கை!

வாடிடும் ஏழைகட்கு வாரிவழங்கி
வல்லா னருளை மேலாய்ப்பெற்று
தேடிட சுவர்க்கம் செய்தன நல்லன
தரணியில் ரமழானை தரமாயேற்றே!

எனக்கே சொந்தமீதென்ற இறைக்கு
ஏந்தினோ முயர்வாய் அதனை-இன்று
மணந்திடும் பெருநாளீதில் – நாம்
மனங்களை இணைப்போமே ஒன்றாய்! 

இல்லாமையொழித்து இனிதுமகிழ்ந்து
இனத்தொடு ஒட்டி என்றுமிருந்திட
நில்லாத நிலத்தினின் நல்லனசெய்திட
நலமேந்தி வருக ஈகைத்திருநாளே!

அறையினிலடங்கி நிற்கும் வனிதைக்கும்
அழுதுநிற்கும் விதவைக்கும் – அன்பாய்
கறையிலா ஆடவர் கிடைத்திட இன்று
கருத்துக்கினிய பெருநாளே தூதேந்திவா!

உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதம்நீக்கி
உத்தம நபியின் ஸுன்னாவையேற்று
கயமைநீக்கி நற்கருமம் செய்திட
கருணைமழை யேந்திவா பெருநாளே!

- மதுராப்புர கலைமகன் பைரூஸ்

நன்றி - தினக்குரல் 19-08-2012


OPINION'S:
Kalanenjan Shajahan 
நீங்கள் நல்ல சொற்களை சொத்தாய் பெற்றவர். 2012/08/16


ஏன் கவி எழுதுகிறேன்…?


ஏன்கவி எழுதுகிறாய் எனக்கேட்டவன்கு
ஏன்நான் கவியெழுதுகிறேன் என்றேன்பா
குன்றுபோல் நிமிர்ந்து நாளும்நிற்கும்
குவலயத்துத் தமிழ்ப்பற்றுப்பாவென்றேன்நான்
அன்னைதாதை பெருமை யுரைத்திட
அணைகடந்தேவரும் நற்றமிழில்நான்
இன்மணம் கமழ்ந்திட இதயம்நகைக்க
இனிதெனக் கவிபுனைகிறேன் என்றேன்பார்!

வலியார்முன்சென்று புயத்துசால்வைமாட்டி

வலியொடு கூனிக்குறுகி பாரைநோக்கும்
இல்லாரின் துன்பம் பாரிற்கோதிட நான்
இயன்று விழிநீர்கசிய கவியெழுதுகிறேன்
கிலியெதற்கு நாமெலாம் பாரிலொன்றே
கிள்ளியெறிக மடைமை யும்மில்என்று
புலிபோலும் சீறியெழுந்து என்னவர்க்காய்
பதட்டமின்றி யெழுதுகிறேன் நான்கவியே!

கோடிகள் கோடாய் வைத்துறங்கி

கருத்தோடு வருவார்க்கு பத்துகள்ஈந்து
பாடிடும் புள்ளிகளின் வாய்க்குமிளகீய
பைந்தமிழில் நானும் எழுதுகிறேன்
நாடிபிடித்து மெய்நோக்கி என்றமிழில்!
நலமாகத்தான் என்கிறார் கவிபார்த்து
ஆடிப்போய் அவர்கூற்றில் மயங்கி
ஆட்டங்காண் கவிதை செயவிலைநான்!

ஏன்கவிதை எழுதுகிறாய்நீ கேட்டிடும்

எடுப்பான கேள்விக்கு விடைசொல்வேன்!
ஊனின்றி வித்தைபால் காதலுற்று
ஊரெங்கும் கல்விப்பாலுக்காய் கையேந்தும்
என்னிரத்தங்கள் வடித்திடும் கண்ணீர்க்காய்
எழுதுகிறேன் மேடைதுடித்திடப் பேசிடும்
ஏற்றமிலா மாக்களை கொடுநகஎழுத்தால்கீறி
எட்டப்பன்நீயடா என்றிட எழுதுகிறேன்கவிநான்!

நாற்குண முனக்கேயுரித்து பதுங்குநீயென்று

நற்குணத்தொடுள நங்கையை கசக்கிப்பிழிந்து
பொற்பாதம் இவளதென்று பரத்தைநாடும்
பேடிகளின் கொட்டம்நீக்கிடத்தான் எழுதுகிறேன்
சுற்றமும் முற்றமும் போற்றுதற்காய் அல்லவே
சூழ்ந்துமாலை வருதற்கும் சால்வைசாத்துதற்கும்
குற்றம்காண் கவியெழுதேன் நான்காண்
குன்றிட்ட தீபமாய் எம்மவர்காண எழுதுகிறேன்!

பணமாலை புகழ்மாலை பெறுதற்கு

பைந்தமிழை கெட்டொழியேன்நான்
ஈனர்கள் செயல்கடிந்து இதமானநற்றமிழில்
இச்சைதரும் மெய்யீவேன் நாம்வாழ
குணத்தொடு என்றும் எம்மவர்நின்றிட
கனமிலா தாய்த்தமிழில் எனதானகவிவழியில்
பணத்தொடு மனிதம் பார்க்காமாந்தர்தம்
பைத்தியம் நீக்கிட கவியெழுதுகிறேன்நான்!

இல்முன்குந்தியே நின்றிடும் சோதரிகள்

இல்வருவான் எப்போ எனஏங்க தெரு
இல்முன்நின்று குலைக்கும் தரங்கெட்டார்
இரத்தம்வருங்கால் கழுத்துநெறுக்கிட
சொல்லெடுத்து உரைப்பாய் கவியெழுத
சொல்வாரிவனோ என்று? நகைப்பெனக்கு
சொல்க ஏன் எழுதுகிறாய் கவியென்பான்கு
சொரியாமல் முதுகு சொன்னேன்பாஇது!

மரபுமிலை புதுவதுமிலை உன்கவியில்

மரமண்டை யெழுதுகிறாய் ஏன்தான்?
கூரறிவாய் உரைப்பதாய் வைபவன்க்கு
நான் ஏன்எழுதுகிறேன் கவிசொன்னேன்பா!
பெரிதாகக் கவிபுனைய கூத்தனுமல்லன் 
பொரிதந்த நற்கவிஞன் காளமேகமுமல்லன்
ஏறிவருகின்ற சொல்லெடுத்து எனக்கான
என்றமிழில் சொல்வேன்கவி ஏன்என்பான்க்கு!

ஏனென்ற வினாதொடுத்து விடையுங்கண்டு

ஏதிலார் நெஞ்சத்தோடு வினாதொடுக்க
பன்னூறு கவிதரலாம் நலமாக நிலம்வாழ
பைந்தமிழின் வீசுபுகழ் தரணியோத
சொன்னேன் யான் இக்கவியில்பண்பொடு
சொலும் கவியெலாம் எனதானபாணியிதே!
கூன்நிமிர வழிசெய்வோம் நம்மவர்தம்
குழந்தைமனம் இன்புறவே ஏதும்செய்வாம்!

-
கலைமகன் பைரூஸ் 

நன்றி -

இலண்டன் தமிழ் வானொலி - வியாழன் கவிதை நேரம்
மெட்ரோ நிவ்ஸ் METRO NEWS FRIDAY EDITION 2012/09/07

புதன், 15 ஆகஸ்ட், 2012

மறைத்தழிநீ!


பெண்ணே!
மயக்கும் கண்ணில் 
காந்தத்தின் வலிமை காண்கிறேன், 
இதழின் அழகில்
பெண்மைகாக்கும்
தீயைக் காண்கிறேன்,
கூரிய பற்களில்
பகைவனைக் குதறும்
வீரம்காண்கிறேன்,
உந்தன் கூரிய நகங்களில்
பெண்மைகாக்கும்
ஆயுதம்காண்கிறேன்.
மென்மையான பெண்மையில்
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லுதடீ பெண்ணே உன்னழகு!
மாற்றானின் பார்வையில் பதுமை
ஆனால் உனைக்காத்திட
உவமைசொல அறியேன் நானடீ!
கார்குழலாள்,
வருகின்ற பேய்களை மறைத்தழிநீ!

-கலைமகன் பைரூஸ்

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

போல


குழந்தை அழும் !
அழுவதால் நீ
குழந்தையாக முடியாது !

பூ புன்னகைக்கும் !
புன்னகைப்பதால் நீ
பூவாக முடியாது !

காற்று தழுவும் !
தழுவுவதால் நீ
காற்றாக முடியாது !

நதி ஓடும் !
ஓடுவதால் நீ
நதியாக முடியாது !

மழைத்துளி விழும் !
விழுவதால் நீ
மழைத்துளியாக முடியாது !

வானவில் வளையும் !
வளைவதால் நீ
வானவில்லாக முடியாது !

கம்பன் கவிசெய்தான் !
கவிசெய்வதால் நீ
கம்பனாக முடியாது !

மாதிரியின் முகமூடியில்
தன் முகவரி இழந்தவனே !

நில்!
சூரியன் தனை உள்வாங்கித்
தன் சுயம் இழக்காத
நிலவைப் பார் !

கவனி !
மாதிரியைப் படி
அதன் மாதிரி நீ
ஆகிவிடாதபடி !

செல் !
மாதிரியைத் தொடர்ந்து அல்ல !
மாதிரியின் பாதைகளில்
தொடர்ந்து...

போலச் செய்து
போலியாகி விடாதே !

மாதிரி
சூரிய ஒளிகீற்றுகள் தான் !
அதில்
உன் சுயமெனும்
கண்களை இழந்துவிடாதே !

மாதிரியை
உன் தோளில் வை !
மாதிரியின் தோளில்
நீ சவாரி செய்யாதே !
ஏனென்றால்
உன் சுவடுகள்
தெரியாமல் போய்விடும் !


- பாண்டூ

நான் நயந்த பலமுறை சுவைத்த நல்ல கவிதை (கலைமகன்)


சனி, 11 ஆகஸ்ட், 2012

ஏன் இன்னும் நனைகிறாய்?



அழகான மேனி அலங்காரமாய் இருக்க
அந்திப்பொழுதும் எப்பொழுதும் நீ
நிழல்தரும் வனப்போடு இருக்க
நீச்சலடிக்கின்றாய் இன்னும் நீரில்!

உடம்பென்ன ஆவதோ நீரில்மூழ்க
உயிர்க்கு என்ன ஆகுமோ இருக்க
படம்பிடிக்கும் நாகமும் மறையுமன்றோ
பட்டாம்பூச்சியாய் நீமட்டும் நனைகிறாயே?

கழுவுதற்கு “ஸர்ப்எக்ஸல்” இருக்க
கலக்கமேனோ எனக்கு என்கிறாயா?
உழுவன் களனியில் இருப்பதுபோலும்
உருமாறி நீஇருக்கிறாய் நனைந்தே!

கறைபடிந்த உன்னாடை ஒருபுறமிருக்க
கரைந்தே செல்லுது உடம்பு எப்படி?
முறையாக நீநீந்திக் குளித்திடு
முறையாக ஆடையைத் துவைத்திடு!

கவலை வேண்டாம் மகனே என்கிறாளோ
கண்ணுக்குள் பூசிக்கும் உன்னன்னை உனை
தேவலைதான் அவளிருக்க உனக்கேன்வதை
தெளிவாக வடிவாகத் தந்திடும் “ஸர்ப்எக்ஸல்”

உடம்பையும் தேற்றிடு நனைந்ததுபோதும்
உன்னை பைத்தியம் என்பர் நிலைகண்டு
திடவுறுதி வேண்டாமோ எல்லாம் செய்ய
தடம்புரண்டதுபோதும் தண்ணிநீக்கி நீவா!

சுத்தம் சுகம்தரும் என்பதற்கு நனைகிறாய்
சீருடையில் மாற்றம் செய்யலாம் அதனால்
சத்தம் போட்டுச் சொல்கிறாய் “ஸர்ப்எக்ஸலை”
சட்டென்றுவா வந்துரத்துச் சொல் அழகிதனால்என்று!

-கலைமகன் பைரூஸ்

கடிந்திடு சோம்பலை இளவல்நீ!



கடுமைகொண்ட தோளினாய் பாரில்நீ
கடமைசெய்ய ஆயிரமுண்டு தெளிவாய்
நடுக்கடலில் மூழ்கி முத்தாய்பணி
நட்டவேண்டாமோ தெளிநீ தெளி!

ஆயிர மாயிரம் கனவுகளுடன்நீ
அகிலமெங்கனும் சுற்றுகிறாய் பார்
தேய்ந்து செல்லும் பாதம்மட்டும்
தெளிந்திடு அதனில் விளக்கந்தான்!

விடலைப் பருவமது தாண்டிநீ
வித்தைகாட்டும் பருவம் கண்டனை
தேடலில் நாளும் நீஉயரு
தரணியி லுயர்மொழி உனதன்றோ?

நாட்டின் சொத்தே இளவலே!
நம்பிக்கைவை உன்னில் நானென்று
ஏட்டில் உன்பெயர் பதிவாகும்
ஏற்றம் கண்டிடும் படையன்றோ?

நாட்டின் கல்வி சிக்கலன்றோ
நினைத்திடின் நீயும் பேடியன்றோ
பாட்டுக்கள் புதுபடை நீயுயர
பெருமை கொள்ளும் நாடுமன்றோ!

ஆழச்சென்று ஆழியில் சென்று
அரிதான முத்தினைப் பெறுமாப்போல்
வீழச்செய்திடும் இடுக்கண் கண்டுழிள
வீழ்ந்திடதாதே – நீநிமிரு நீவாழ!

களிபடைத்த மொழியுடை இளவலே
கருத்தினில்வை உன்னாற்றல் மேலுயரும்
களிகொள்வாய் உன்னைப் பார்போற்ற
கடுமைகொண்ட தோளினாய் நீயெனும்போ!

இமாலயத்தை நீதொட ஏறுசிறுமலையாதி
இமயம் உன்கைக்குள் வந்துவிடும்பாரு!
விமானம் புதுபடை வளங்களுனக்குள்
வேண்டு மதற்கு உனக்குள்விருப்பு!

அக்கினிப் பிழம்பதை அங்கையில்நீகொள்
அக்கினியாவிது எனப் பாரில்நீசொல்
போக்கிரித் தனங்கள் உனக்குள்நாண
பேரும்புகழும் நீபெற உனைநம்பு!

முடியாத தேதுளது எனதிளவலேநீ
முயற்சியுடைத்தாயின் எலாம் பாதவருகே!
கடியாதே இயலாதென்றுநீ மட்டும்
கடிந்திடு சோம்பலை கழற்றிடதனை!

எல்லாமாம் என்னாலே என்ற
எடுப்பான மந்திரத்தை கைக்கொள்நீ
பொல்லாத கருமமதும் அங்கைபாரு!
பாருனைத் துதித்திட பாரைப்பாரு!

-கலைமகன் பைரூஸ்

நன்றி 
http://www.tamilmirror.lk/2012-04-05-07-07-32/46487-2012-08-11-12-10-21.html

--கருத்துரைகள்--

Seyed Hussain 
உங்களது தமிழில் பல விடயங்களை நான் பார்க்கின்றேன் .ஒன்று அதில் தமிழ் இருக்கிறது . அறிவும் பிரதிபலிக்கப்படுகிறது . உண்மையும் இருக்கிறது
நீங்கள் எழுதும் பொழுது ஆளுமையுடன் எழுதுகிறீர்கள் . இனி வேறென்ன தேவை..கலையும் கவிதையும் இலகுவாக வருவதில்லை . புலமையும்,
கூரறிவும்கொண்ட ஆத்மாவினால்தான் முடிகிறது.இதை இறைவன் உங்களுக்கு அன்பளித்த்ருக்கிறான் .உங்களது பணி தொடரவேண்டும் .

Suraiya Buhary
அனைத்து கவி வரிகளும் அருமை சகோதரா...! மேலும் உங்கள் கலை
பயணம் தொடர இறைவனிடம் வேண்டுகின்றேன்...!


Razana Manaf 
இளைஞர்களின் நாடியை பிடித்துப்பார்த்தது போல் இருக்கின்றது அத்தனையும் முத்தாய் இருக்கின்றது ஆனாலும் படிப்பவர்களுக்கு புரிதலில் கொஞ்சம் சிக்கல் இருக்கும் தூய தமிழ் வார்த்தைகளை பொறுக்கி கவிமாலையாக தொடுத்திருப்பதினால்...!! எல்லாவரிகளுக்கும் மகுடம் சூட்டுவதுபோல் உள்ளது இந்தவரிகள்...

//எல்லாமாம் என்னாலே என்ற
எடுப்பான மந்திரத்தை கைக்கொள்நீ
பொல்லாத கருமமதும் அங்கைபாரு!
பாருனைத் துதித்திட பாரைப்பாரு!//

என்னாலும் முடியும் என்பது தன்னம்பிக்கை 
என்னால் மட்டும்தான் முடியுமென்பது தலைக்கணம் 

ஆகவே, தலைக்கணத்தை விடுத்து தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்போம் பாரினில் நாமும் முதன்மை பெறுவோம்.


Ilakkiya Sahi 
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா !
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா !
என்ற பாரதி வரிகள் நினைவுக்கு வருகிறது கவிஜரே .


Jancy Caffoor
அழகுத் தமிழில் இளைஞனஞக்கு தன்னம்பிக்கையூட்டும் அழகான வரிகள்..........இன்றைய நவீன உலகில் எழும் வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து மீள்வதற்கான வழிப்படுத்தல்கள் எழுத்துருவில் ஒட்டிக்கிடக்கின்றதிங்கே!

//முடியாத தேதுளது எனதிளவலேநீ
முயற்சியுடைத்தாயின் எலாம் பாதவருகே!
கடியாதே இயலாதென்றுநீ மட்டும்
கடிந்திடு சோம்பலை கழற்றிடதனை!//

முடியும் என்ற மனதின் அறைகூவலே மானசீக குரலாய் ஒலிக்கின்றதிங்கே.........

வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை.....சமூகத்தின் சிறந்த அங்கத்தவனாய அந்த இளவல் மாற்றமடைய, உங்கள் ஒவ்வொரு வரிகளும் தோளணைத்து புத்தி புகட்டுகின்றது ஆளுமையுடன் !

Vj Yogesh 
"அக்கினிப் பிழம்பதை அங்கையில்நீகொள்
அக்கினியாவிது எனப் பாரில்நீசொல்
போக்கிரித் தனங்கள் உனக்குள்நாண
பேரும்புகழும் நீபெற உனைநம்பு!" மிகவும் இரசித்தேன்.. வாழ்த்துக்கள்.



Thava Parames 

முடியாத தேதுளது எனதிளவலேநீ
முயற்சியுடைத்தாயின் எலாம் பாதவருகே!
கடியாதே இயலாதென்றுநீ மட்டும்
கடிந்திடு சோம்பலை கழற்றிடதனை!.......அருமையான ஒரு வழிகாட்டி கவிதையென்றே சொல்ல வேண்டும்






வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

நல்லபெயர் வாங்க வேண்டும்!



நல்ல பிள்ளைபோல நாளும் வளரணும் 
நாளும் நல்லபெயர் வாங்கி வாழணும் 
செல்லமாக எவருடனும் சேர்ந்து பழகணும் 
சொந்தக் காலில் என்றைக்கும் நிற்க முயலணும்! 

உண்மையை வையமெங்கும் நீபேசணும் 
உயர்நற்குணங்களுடன் என்றும் நீவாழணும் 
நன்மைசெய்து பிறர்மதிக்க நீவாழணும் 
நாளும் பெற்றவரைப் போற்றி வாழணும்! 

இறைவனை என்றும் தொழுது மகிழணும் 
இதழில் என்றைக்கும் இனியன பேசணும் 
மறைவழியையே மார்க்கமாய்க் கொள்ளணும் நீ 
மண்ணி லுள்ளவரை மடைமை அழிக்கணும்! 

பேதைமைக் குணம் நீக்கி வாழணும் - நீ 
பேதையர் மானமும் காத்து வாழணும் 
சாதியறைவானைச் சாடி வாழணும் - அவன் 
சரித்திரத்தைச் சகதியிலே வீசியெறியணும்! 

மனிதத்தை என்றும் புனிதமாய்ப் பார்க்கணும் 
மனிதமிலா மாக்களை குத்தி யுதைக்கணும் 
புனிதனாய் நீயிருக்க அற்றாரைச் சேரணும் 
புவியினில் கயிராயிருக்க வழிநீசெய்யணும்! 

வாடுகின்ற பாட்டாளி வழிகாணச் செய்யணும் 
வான்முட்டும் மாளிகைகள் நிலைகேட்கணும் 
அடிதொட்டு வணங்குநிலை அறவே மாறணும் 
அகிலமெங்கும் நல்லவை உரக்கச் சொல்லணும்! 

கேட்டிடவே திசையெட்டும் அண்டமெல்லாம் 
கருத்தாய நன்மொழிகள் இவன்சொல்வானென 
கேட்டிடவே உளம்தான் விரும்புதையா - நீ 
கூன்பட்டுக் குனிந்தாலும் நலமே செய்வாய் 
குவலயத்து வாழும் அது வீழ்வதில்லையே!


 -கலைமகன் பைரூஸ்

நன்றி
தினகரன் வாரமஞ்சரி
எழுத்து
இலண்டன் வானொலி (வியாழன் கவிதை நேரம்)

சனி, 4 ஆகஸ்ட், 2012

கலைக் குரல்

அன்பான வேண்டுகோள்
அன்புடனே வந்தார் பலர்க்கும்!
---------------------------------------------------
அரவணைத்தே கொடுக்கும் நீங்களெலாம்
என்தமிழில் யானியற்றும் இப்பாக்கள்கண்டு
இரவல னாம் தாய்த்தமிழில் இவனெனக்கண்டு
இதயத்தொடு ஒட்டிக் காதல்செய்வீரெனை!

நான்நயந்த நற்றமிழில் வள்ளுவன்குறள்போல்
நானிலமெங்ஙனும் காணேன் தீம்பால்
துன்பந்தான் குறள்வெண்பாவாய் வாராமையால்
தாய்த்தமிழில் என்பாணியில் இயற்றியபாவாமீது!

நாளும் பொழுதும் காட்சியாய் என்முன்னேவரும்
நெஞ்சை வாட்டும் செய்கைகள் பாவாய்
காலந்தாழ்த்தாதே எனக்கேயுரித்தாய தமிழில்
காலமெலாம் யான்தருவேன்! சுவைப்பீரே!

தளைதட்டுதல் கண்டு வெண்பாவா எனநோக்கா
தருகின்றதா ஈதில் நலமாம் கருத்து எனநோக்கி
இளையான் என்னில் சேர்க்க அன்பினையும்
இங்கிதமாய்த் தருவேன் இன்னும் பாநான்!
-------------------------------------------------------------------
அவை....













0016
சினத்தைக் கைக்கொண்டா னாயின் ஒருவன்
தன்னைக் கொன்றான் ஆங்கு

0015
சிற்றுடல்க்கு ஏங்கு முள்ளம், சிறுமைதான்
அன்புடை உள்ளம் உயரும்

0014
அரிவை அறியவை போற்றுதல் அழகு
அறியாயின் பேதை எனல்

0013
சிறுமை இளமை மூப்பு மூன்றின்கண்
வனப்பு நோக்க லிழுக்கு

0012
போற்றினும் போற்றுக நல்லுளமே என்றும்
அழகினை நோக்கினின் அழிவு

0011
ஜன்மத்திலேது பயன் அழகினையே உன்னின்
சிறுமைக் குணமல்லோ அறி


0010

அழிவதூஉம் மாறுவதூஉம் யாக்கை - பயனில
நட்டார்கண் ஒட்டுதலோ திரு


0009
வேண்டுக வேண்டின் நல்லன்பு - வேண்டில்
வேண்டாமை நன்று மற்றும்பிற


0008
மறைத்தலின் மாண்புணராதார் - நீலிக்
கண்ணீ ருகுத்தலி லேதுபயன்?

0007
குறைபாடு இலா ஆதி முதலோனின்
நிறையைப்பாடு இல்லை துன்பமே!

0006
இல்லை யில்லையென்று இல்வருவான்க்கு
இல்லையென்றாயின் நீயுமிலையே!

0005
உண்ணல் பருக லற்றும் - காதலர்
விண்புகழ் பண்பொடு வாழ்தலுயர்வு!

0004
அறிவுடைமை எ.ஃதெனின் காதலர் - ஈற்றில்
செறிந்த வுயிராய் ஒட்டியிருத்தல்!

0003
சின்னஞ் சிறாரின் இன்னல் கண்டவர்
துன்பம் துடைப்ப தழகு!

0002
என்பின் வலியொடு துயருறும் - பாலர்
பணிக்கண் அமர்த்துதல் தீது!

0001
செய்தொழில் ஊக்கம் கண்டுழியும் - அவர்தம்
ஊதியம் கொடுக்காமை இழுக்கு!

-----கருத்துரைகள்----

Pirainila Krish 
திருக்குறளை அவமதித்தல் எனும் கருத்து வாசிப்போன் மனதில் தோன்றாமல் இருந்தால் வெற்றி அண்ணா.. வாழ்த்துக்கள் உங்கள் பயணத்திற்கு...
Begum Sbegum
நல்ல முயற்சி... தொடருங்கள்....
யாழினி முனுசாமி 
அருமையாக இருக்கின்றன..
Shanthini Rasathy
ஆகா ..மனம் நிறைந்ததை விட ..கண் நிறைந்தது உங்கள் கவி படித்து. பேரழகு.  கருத்து சொல்ல எனக்கு தகுதியில்லை ..ஆனால் ..வாசிக்கும்போது சந்தோசமாக உள்ளது ..உங்கள் கவிப்பார்வை வீரம் மிக்கது....பல சாதனைகளை நீங்கள் அடைய வேண்டும்.
தீயவைகளை தீயிட்டுக்கொழுத்தும் நீங்களிட்ட பாவனைத்தும்... திருந்துவோரே இப்பூமியில் இனியிருக்கத்தகுதிபெற்றவர்.
Rajakavi Rahil
    இன்று இலக்கணம் கடந்த இலக்கியங்கள்தான் பேசப்படுகின்றன .
    தமிழ் வளர்வதற்கு இலக்கணம் மீறாத இலக்கியம் அவசியம் .
    தமிழ் வளர்ந்த பின் அந்தத் தமிழ் வேறு சிகரம் தொட ,வேறு கிரகம் செல்ல
    இலக்கணம் மீறிய அழகும் பொருளும் மிக அவசியம் .
    மக்களுக்கான இலக்கியங்களில் இலக்கணம் பெரிது படுத்தப் படுவதில்லை .
    நானும் 1500 குறள்கள் எழுதி இருக்கிறேன் 100 அதிகாரங்களில்.
    உங்கள் முயற்சியை தொடருங்கள் !Kanapathippillai Thevasooriyacumar
VERY NICE,I LIKE IT!!!!......
Kannady Mano:
உங்கள் தமிழ் மிக சுத்தமானதாகவும் தன்னடக்கமாகவும் உள்ளது. உங்கள் பெருமையை குறிக்கின்றது
நல்ல எழுத்தாளன் தன்னைப்பற்றி புகழமாட்டான் அவன் அடி மனதில் இருக்கும் வேதனைகளையும் சகிக்க முடியாத மனித துன்பங்களையுமே எழுதி மகிழ்வான். அவ்வண்ணம் தாங்கள் உள்ளீர்கள் நன்றியுடன் வாழ்த்துக்கள்!







என்றமிழ் வாழ்க!


இனிப்பால் எனையீர்த்தாள் பலவாய்
கனிப்பாலுண்டே னவளில் பலவாய்
தனியாக் காதலா லொன்றித்தேன் நிலவாய்
தங்கத் தமிழெனக்குள் நின்றாள்!

நின்றவ ளவளின் பெருமை உரைத்தேன்
நிலத்தினில் வாழ்ந்திட கொடுத்தேன்
வண்டமிழ் தென்றமிழ் சுவைத்தேன்
வளமாய் நின்றிட என்றமிழ் கற்றேன்!

கற்றிட்ட தமிழினை சொன்னேன் நலமாய்
ககனமெங்கும் பெருமை யுரைத்தேன் பலவாய்
நெற்றிப்பொட்டென உறைந்தாள் கனமாய்
நெறிகெட்டாரை அழித்திட வந்தாள் திடமாய்!

திடமாய் வந்த தாய்த்தமிழ் சொன்னேன்
தெருவெங்கும் கனித்தமிழ் மொழிந்தேன்
படர்ந்திட செந்தமிழ் பலர்க்கு மீந்தேன்
பகலனொளியாய என்றமிழ் வாழ்க!

- கலைமகன் பைரூஸ்


--கருத்துரைகள் --

Suraiya Buhary
சகோதரா! உங்கள் கவிதை பாங்கோ தனி ஒரு அழகு. உங்களுக்கு நிகர் நிங்களே..! வாழ்துக்கள்..!

Veerarajan Lakshmanan 
செந்தமிழில் யாழிசைத்தாய்
பன்னிசையால் கவி நெய்தாய்
காற்றில் கலந்திருந்தாய்
ஈசனில் ஒன்றானாய்..
அமுதினிது
அதில் தமிழினிது..!

Suraiya Buhary 
Arumai sakothara

Rajakavi Rahil 
தமிழை சர்க்கரையாக்கி
அதன் அழகை தேனாக்கி
மொழியின் உயிரை
பிடித்து
வண்ணப் பட்டாம் பூச்சியாக்கி
தந்து
என்னை
இனிக்க வைத்திருக்கேறீர்கள்.
என் மனதை
வண்ணமயமாய் ஆக்கி
மயக்கிவிட்டீர் !


Jawad Maraikar
Deputy Director of Education (Retired) at Ministry of Education, Sri Lanka - From Puttalam
முதலிரு அடிகள் பிரமாதம் . பலவாய் என்பதை அழகான சிலேடையாகப் பயன்படுத்தியுள்ளீர்கள்.சில அடிகளில் சந்தம் உடைவதை தவிர்த்தால் இன்னும் அழகாக இருக்கும்.சொற்களை எவ்வளவு இறுக்கமாகப் பயன்படுத்துகின்றோம் என்பதில் கவிதையின் சிறப்பு தங்கியுள்ளது. சங்கத்தமிழ் கவிதைகள் இன்றளவும் போற்றப்படுவதற்கு அவற்றின் சொல்லாட்சியும் இறுக்கமும் முக்கிய காரணங்களாக உள்ளன. அனாவசியமான சொற்களை அவற்றில் காணமுடியாது. இடைச்சொற்கள்கூட இல்லை. இதனால்தான் விளக்குவது கட்டுரை ,உணர்த்துவது கவிதை என்பார்கள்.இவை அனைத்தும் உதாரணங்களுடன் பேசப்படவேண்டியவை. அதற்கு இத்தளம் ஏற்ற இடமல்ல என்பதால் சுருக்கிக் கொள்கின்றேன். இறுதியாக ஒன்று. சிந்தனையும் மொழியாற்றலும் கொண்ட எவரும் சிறந்த படைப்பாளியாகலாம்.எடுத்துக்கொண்ட பொருளை மிகச் சரியாக உணர்த்தும் விதத்தில் சொற்களையும் அணிகள் போன்றவற்றையும் எவ்வாறு கவிஞன் பயன்படுத்துகின்றான் என்பதிலும் கவிதையின் ஆயுட்காலம் தங்கியுள்ளது. சிந்தனையும் மொழியாற்றலும் உங்களிடம் நிறையவே உள்ளன. அவசரமில்லாமல் சற்று நிதானத்துடன் எழுதினால் வெற்றியடையலாம். மெளனி,லாசரா போன்ற ஜாம்பவன்கள்கூட தாம் எழுதியவற்றை சில காலம் வரை வைத்திருந்து மீண்டும் மீண்டும் திருத்திய பின்னரே அச்சுக்கு அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.இதனை நீங்களும் கவனத்திற் கொள்ளுங்கள்.இன்ஷா அல்லாஹ் வெற்றி கிடைக்கும். 


Shanthini Rasathy 
தமிழ் உங்கள் இதயத்தில் இனிப்பாய் 
தமிழ் உங்கள் உயிருக்குள் இருப்பாய் 
தமிழ் உங்கள் திறமைக்குள் திமிராய் 
தமிழுக்கு பெருமை நீங்கள்,
உங்கள் பெருமை தமிழ்


Ramalan Deen 

ARUMAIYAKA IRUKKIRATHU VARIGAL

Raghavan Srinivasan 

அருமை ...



Nawas Mohammed

Tamilukku alahendr peyar

adhay potriya umakku

tangathtulihalaal

pon tooral toovuhiren

waalha walarha

ungal muytchikku

mutruppulliyillay

மக்கள் நண்பன் 

அழகு

Sheik Mohamed 

அழகு

Fiyas Mohamed

Moli alakahathaan irukkirathu. Vaalthukkal

தமிழன்பன் என்றும் புதியவன் 

தங்கள் கவி வரிகளில் தமிழ் வாழ்கிறது ...

Sharmila Narayanashamy

thamil vaazhka... azhakaana varikal.

Markandan Sinnathamby 

like

கவியன்பன் கலாம் 

அழியாத மொழி; அழகு மொழி இப்பழகு மொழி!

Vetha ELangathilakam 

Nanru eniya vaalththu.


றாபியின் கிறுக்கல்கள்

salam... sir ungka warikal super. en manamaarntha walthukal.