It கலைமகன் கவிதைகள்: புலவோரைப் போற்றுகிறேன்!

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

புலவோரைப் போற்றுகிறேன்!

உருவகங்களால் செதுக்கி
உயர்கவிகள்தரும்
உயர்கலைச் சிற்பி!
-----------------------------




அறிவொடு பண்பும் உள்ள
அமைதியும் கொண்ட நல்லோன்!
இறையொரு வனின் மாண்பை
இனிதெனச் சுவைத்திடும் வல்லோன்!
நறுக்கென நயந்திடும் கவிதந்து
நலமாய உருவகம் பொழிவான்!
பிறவழிச் செல்லாதே தமக்கென
பாவளம் கொண்ட கவியோன்!
மறைவழி நின்று மேலும்
மாண்புறு கவிதை தருவானோ?

-தமிழன்புடன்
கலைமகன் பைரூஸ்

பாவரசிக்குப்பா!
----------------------

























பாவுக்காப் பாவரசி நாமங்கொள்
பைந்தமிழ்க் காதலி - கலைமகள்
நோவாதே யுளங்கள் பார்ப்பாள்
நேசித்திடுவாள் மனிதத்தைநிதம்!

ஆற்றலுள ஹிதாயா ஈழந்தன்னில்
அழியாத பேருடையாள் - நிலைத்தாள்
போற்றுவம் புகழ்கோக்க பாரில்
பைந்தமி ழணங்குடன் வாழ!

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்
21-08-2012 10:55





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக