It கலைமகன் கவிதைகள்: ஏன் இன்னும் நனைகிறாய்?

சனி, 11 ஆகஸ்ட், 2012

ஏன் இன்னும் நனைகிறாய்?



அழகான மேனி அலங்காரமாய் இருக்க
அந்திப்பொழுதும் எப்பொழுதும் நீ
நிழல்தரும் வனப்போடு இருக்க
நீச்சலடிக்கின்றாய் இன்னும் நீரில்!

உடம்பென்ன ஆவதோ நீரில்மூழ்க
உயிர்க்கு என்ன ஆகுமோ இருக்க
படம்பிடிக்கும் நாகமும் மறையுமன்றோ
பட்டாம்பூச்சியாய் நீமட்டும் நனைகிறாயே?

கழுவுதற்கு “ஸர்ப்எக்ஸல்” இருக்க
கலக்கமேனோ எனக்கு என்கிறாயா?
உழுவன் களனியில் இருப்பதுபோலும்
உருமாறி நீஇருக்கிறாய் நனைந்தே!

கறைபடிந்த உன்னாடை ஒருபுறமிருக்க
கரைந்தே செல்லுது உடம்பு எப்படி?
முறையாக நீநீந்திக் குளித்திடு
முறையாக ஆடையைத் துவைத்திடு!

கவலை வேண்டாம் மகனே என்கிறாளோ
கண்ணுக்குள் பூசிக்கும் உன்னன்னை உனை
தேவலைதான் அவளிருக்க உனக்கேன்வதை
தெளிவாக வடிவாகத் தந்திடும் “ஸர்ப்எக்ஸல்”

உடம்பையும் தேற்றிடு நனைந்ததுபோதும்
உன்னை பைத்தியம் என்பர் நிலைகண்டு
திடவுறுதி வேண்டாமோ எல்லாம் செய்ய
தடம்புரண்டதுபோதும் தண்ணிநீக்கி நீவா!

சுத்தம் சுகம்தரும் என்பதற்கு நனைகிறாய்
சீருடையில் மாற்றம் செய்யலாம் அதனால்
சத்தம் போட்டுச் சொல்கிறாய் “ஸர்ப்எக்ஸலை”
சட்டென்றுவா வந்துரத்துச் சொல் அழகிதனால்என்று!

-கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக