It கலைமகன் கவிதைகள்: வீழமாட்டானோ படுபாவி!

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

வீழமாட்டானோ படுபாவி!



அகவை ஆறுமட்டுமே ஆன
அன்புக் குழந்தை அஃப்ரா
சீராய் ஆடிப்பாடி யிருந்தாளே
சுந்தரமாய்ப் பேசி நின்றாளே!
குழந்தை மொழியினில்
எத்துணை ஆசைகள் பெற்றோரில்!
ஆயினும்......

கொடுமை செய்வதில்
வில்லங்கம் செய்வதில்
மிட்டாயில் ஆசைகாட்டி
பூக்கள் தருவதில்
ஆசைகாட்டி
கபோதிஇவன்
செய்திட்ட கொடுமை
“கல்புகள்” துடித்திட
இரத்தக் கண்ணீர்வடித்திட
செய்கிறதே பாருங்கள்!

சின்னக்குழந்தை
புன்னகை பூப்பதும்
போலிஅன்பு காட்டுதலில்
மதிமயங்குதலும்
இல்லையா
சொல்லுங்கள்?

நான் என்றால்கூட
நிதனமாய்
பதில்சொல்லத்தெரியாத
பிஞ்சுமனத்தை
பூப்பறித்துத் தருகிறேன்
நீவாவென்று
பூவான அவளை
பிஞ்சு அப்ராவை
அழைத்துச்சொன்றானே
படுபாவி இவன்!
“கலாகத்ர்”
என்றுமட்டும் இவனை
விட்டுவிட்டால்
நாய்கள் நிறையவே
குரைக்கும்!


இன்று இந்தப்பிஞ்சு
நாளை...
நமதான
இளம்யுவதிகள்
தாய்மார்கள்
அளவிலாமல்
பேடிகளால்
மந்தபுத்திஎன்றும்
உளநோயாளிஎன்றும்
பேர்சூடிக்கொண்டு
வதைசெய்யப்படலாம்
சரியா?

தேனொழுகப் பேசி
தேள்போலக் கொட்டும்
இந்த விசமிபோலும்
இடுகாட்டுநரிகளின்
ஊளையடக்க
எழுந்திட வேண்டாமோ?

என்ன பாவம்
இந்தப் பிஞ்சுள்ளம்
செய்தது?
நெஞ்சுவெடிக்கிறது....!
“இவன்செய்த
தகாத கொடுமைக்கு
சட்டம் நிச்சயம்
தண்டனை கொடுக்கும்”
இது நகைப்பானகூற்று!
வந்துடுவான் இவன்
நாசமாப்போவ
மீண்டும்
பித்துஎனச்சொல்லி
எத்தனையோ
பிள்ளைகளைச் சாய்க்க....!
கறுப்புத் துணிகட்டிய
நீதியின் கண்கள்
நீதியாக
அநீதிசெய்தவனை
கழுமரத்தில் ஏற்றுமா?
விடைகாணாமல்
ஆயிரமாயிரம்
வாய்கள் முணுமுணுக்கின்றன!

பேசாமடந்தைகளாக
விழிபதுங்கி நாமிருந்தால்
கற்பனைகள் சுமக்கும்நாம்
விகற்பங்களாகத் திரிவோம்!
எமது தார்மீக சட்டம்
இந்த “நல்ல“ நாட்டில்
ஒருபோதும்
உச்சாணியில் ஏறாது!

நமது தலைகள்
பம்மாத்துப் பேசுவதிலும்
கைகள் கூப்புதலிலுமே
நாளாந்தம் இருப்பதால்
எக்கேடுகெட்டாலும்
சும்மாதான் நிற்கும்!
வெறும் வீராப்புமட்டும்தான்
நம் ஆண்களுக்குள்
சேலை மிகப்பொருத்தம்!!

சின்னஞ்சிறு உருவம்
இப்போதும்
மனக்கண்களுக்குள்
கண்ணீரை
ஆறாய்த் தள்ளுகிறது!
இந்த
தரங்கெட்டானின்
ஈனச்செயல் எண்ணி
இவனை
சாயத்திடத்துடிக்கிறத!

பிஞ்சுமனமாய்
எங்கள் மனம்
வேதனையால்துடிக்கும்போது
அவன்மட்டும்
ஒய்யாரமாய்த்தான்
அங்கிருப்பான்!

இனியேனும்
நமது அஃப்ராக்கள்
எனதான அஃப்ராவாக
எனது கண்மணியாக
வலம்வர
தனித்துவத்துடன்
இருக்க வேண்டாமோ?
கிளிப்பிள்ளைகளுக்கும்
கெட்டாரை
ஒட்டவேண்டாமென்று
கர்ப்பத்திலேயே வைத்து
சொல்லிக்கொடுங்கள்!
பெண்புத்தி பின்புத்திஎன்று
சொல்லிச்சொல்லி
வைத்தது இனிப்போதும்!!

மனநோயாளியாவது
மண்ணாங்கட்டியாவது
பெண்பித்துதான் இவனுக்கு
மானமில்லாத பேடி!
இவன்போன்ற பேடிகளில்
ஈனச் செயலிலிருந்து
முத்திபெற
“பெண்பிள்ளைகளுக்கு
சமூகப்பால் ஊட்டுங்கள்!
இல்லாவிட்டால்
என்றும்
வேதாளம் முருங்கைமரத்தில்
ஏறும் கதைதான் நிகழும்”

இறைவா!
இந்தப் பிஞ்சுஉள்ளம்
மேலான சுவர்க்கத்தில்நுழைய
கருணைசெய்வாயாக!
இந்தநரகாசுரனுக்கு
விரைவிலேயே
நல்லபாடம் நீ கற்பிப்பாயாக!
நீயே அனைத்தும்
நன்கறிந்தவன்!


-கலைமகன் பைரூஸ்

(வெலிகம கோட்டகொடை பாத்திமா அஃப்ரா (6) என்ற சிறுமியை மண்வெட்டியால் வெட்டிச் சாய்த்த பாதகனின் நிழற்படம் கீழேஉள்ளது.)




கருத்துரைகள்

Seyed Hussain 
சோகத்தை சொல்லும் கவிதையல்ல இது .மனதை உலுக்கும் கவிதை. இந்ததக் கோரச் சம்பவத்தை அழகாக சித்தரித்துளீர்கள். நீதியும் ,நியாயமும், சட்டமும் , ஒழுங்கும் அவர்கள் கைகளில் இருக்கின்றது. அநீதிக்கு நீதிமுலாம்
பூசும் அவர்களது கைங்கரியம் ஒருநாள் மடிந்தே தீரும்.
18-08-2012

Vinothan Rasamanikkam 
அருமையான் உருக்கமான வரிகள்.....
19-08-2012



1 கருத்து:

  1. குழந்தையின் தேகமும் உணர்வும் மலரை ஒத்தன. அந்தப் பிஞ்சுக்குழந்தையின் நெஞ்சு பிளக்கும் வக்கிரமங்களின் அனலை உருக்கமாகவே எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.......
    அந்தக் காட்சிகளை கண்ணுக்குள் நிறுத்தி

    பதிலளிநீக்கு