It கலைமகன் கவிதைகள்: மறைத்தழிநீ!

புதன், 15 ஆகஸ்ட், 2012

மறைத்தழிநீ!


பெண்ணே!
மயக்கும் கண்ணில் 
காந்தத்தின் வலிமை காண்கிறேன், 
இதழின் அழகில்
பெண்மைகாக்கும்
தீயைக் காண்கிறேன்,
கூரிய பற்களில்
பகைவனைக் குதறும்
வீரம்காண்கிறேன்,
உந்தன் கூரிய நகங்களில்
பெண்மைகாக்கும்
ஆயுதம்காண்கிறேன்.
மென்மையான பெண்மையில்
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லுதடீ பெண்ணே உன்னழகு!
மாற்றானின் பார்வையில் பதுமை
ஆனால் உனைக்காத்திட
உவமைசொல அறியேன் நானடீ!
கார்குழலாள்,
வருகின்ற பேய்களை மறைத்தழிநீ!

-கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக