It கலைமகன் கவிதைகள்: என்றமிழ் வாழ்க!

சனி, 4 ஆகஸ்ட், 2012

என்றமிழ் வாழ்க!


இனிப்பால் எனையீர்த்தாள் பலவாய்
கனிப்பாலுண்டே னவளில் பலவாய்
தனியாக் காதலா லொன்றித்தேன் நிலவாய்
தங்கத் தமிழெனக்குள் நின்றாள்!

நின்றவ ளவளின் பெருமை உரைத்தேன்
நிலத்தினில் வாழ்ந்திட கொடுத்தேன்
வண்டமிழ் தென்றமிழ் சுவைத்தேன்
வளமாய் நின்றிட என்றமிழ் கற்றேன்!

கற்றிட்ட தமிழினை சொன்னேன் நலமாய்
ககனமெங்கும் பெருமை யுரைத்தேன் பலவாய்
நெற்றிப்பொட்டென உறைந்தாள் கனமாய்
நெறிகெட்டாரை அழித்திட வந்தாள் திடமாய்!

திடமாய் வந்த தாய்த்தமிழ் சொன்னேன்
தெருவெங்கும் கனித்தமிழ் மொழிந்தேன்
படர்ந்திட செந்தமிழ் பலர்க்கு மீந்தேன்
பகலனொளியாய என்றமிழ் வாழ்க!

- கலைமகன் பைரூஸ்


--கருத்துரைகள் --

Suraiya Buhary
சகோதரா! உங்கள் கவிதை பாங்கோ தனி ஒரு அழகு. உங்களுக்கு நிகர் நிங்களே..! வாழ்துக்கள்..!

Veerarajan Lakshmanan 
செந்தமிழில் யாழிசைத்தாய்
பன்னிசையால் கவி நெய்தாய்
காற்றில் கலந்திருந்தாய்
ஈசனில் ஒன்றானாய்..
அமுதினிது
அதில் தமிழினிது..!

Suraiya Buhary 
Arumai sakothara

Rajakavi Rahil 
தமிழை சர்க்கரையாக்கி
அதன் அழகை தேனாக்கி
மொழியின் உயிரை
பிடித்து
வண்ணப் பட்டாம் பூச்சியாக்கி
தந்து
என்னை
இனிக்க வைத்திருக்கேறீர்கள்.
என் மனதை
வண்ணமயமாய் ஆக்கி
மயக்கிவிட்டீர் !


Jawad Maraikar
Deputy Director of Education (Retired) at Ministry of Education, Sri Lanka - From Puttalam
முதலிரு அடிகள் பிரமாதம் . பலவாய் என்பதை அழகான சிலேடையாகப் பயன்படுத்தியுள்ளீர்கள்.சில அடிகளில் சந்தம் உடைவதை தவிர்த்தால் இன்னும் அழகாக இருக்கும்.சொற்களை எவ்வளவு இறுக்கமாகப் பயன்படுத்துகின்றோம் என்பதில் கவிதையின் சிறப்பு தங்கியுள்ளது. சங்கத்தமிழ் கவிதைகள் இன்றளவும் போற்றப்படுவதற்கு அவற்றின் சொல்லாட்சியும் இறுக்கமும் முக்கிய காரணங்களாக உள்ளன. அனாவசியமான சொற்களை அவற்றில் காணமுடியாது. இடைச்சொற்கள்கூட இல்லை. இதனால்தான் விளக்குவது கட்டுரை ,உணர்த்துவது கவிதை என்பார்கள்.இவை அனைத்தும் உதாரணங்களுடன் பேசப்படவேண்டியவை. அதற்கு இத்தளம் ஏற்ற இடமல்ல என்பதால் சுருக்கிக் கொள்கின்றேன். இறுதியாக ஒன்று. சிந்தனையும் மொழியாற்றலும் கொண்ட எவரும் சிறந்த படைப்பாளியாகலாம்.எடுத்துக்கொண்ட பொருளை மிகச் சரியாக உணர்த்தும் விதத்தில் சொற்களையும் அணிகள் போன்றவற்றையும் எவ்வாறு கவிஞன் பயன்படுத்துகின்றான் என்பதிலும் கவிதையின் ஆயுட்காலம் தங்கியுள்ளது. சிந்தனையும் மொழியாற்றலும் உங்களிடம் நிறையவே உள்ளன. அவசரமில்லாமல் சற்று நிதானத்துடன் எழுதினால் வெற்றியடையலாம். மெளனி,லாசரா போன்ற ஜாம்பவன்கள்கூட தாம் எழுதியவற்றை சில காலம் வரை வைத்திருந்து மீண்டும் மீண்டும் திருத்திய பின்னரே அச்சுக்கு அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.இதனை நீங்களும் கவனத்திற் கொள்ளுங்கள்.இன்ஷா அல்லாஹ் வெற்றி கிடைக்கும். 


Shanthini Rasathy 
தமிழ் உங்கள் இதயத்தில் இனிப்பாய் 
தமிழ் உங்கள் உயிருக்குள் இருப்பாய் 
தமிழ் உங்கள் திறமைக்குள் திமிராய் 
தமிழுக்கு பெருமை நீங்கள்,
உங்கள் பெருமை தமிழ்


Ramalan Deen 

ARUMAIYAKA IRUKKIRATHU VARIGAL

Raghavan Srinivasan 

அருமை ...



Nawas Mohammed

Tamilukku alahendr peyar

adhay potriya umakku

tangathtulihalaal

pon tooral toovuhiren

waalha walarha

ungal muytchikku

mutruppulliyillay

மக்கள் நண்பன் 

அழகு

Sheik Mohamed 

அழகு

Fiyas Mohamed

Moli alakahathaan irukkirathu. Vaalthukkal

தமிழன்பன் என்றும் புதியவன் 

தங்கள் கவி வரிகளில் தமிழ் வாழ்கிறது ...

Sharmila Narayanashamy

thamil vaazhka... azhakaana varikal.

Markandan Sinnathamby 

like

கவியன்பன் கலாம் 

அழியாத மொழி; அழகு மொழி இப்பழகு மொழி!

Vetha ELangathilakam 

Nanru eniya vaalththu.


றாபியின் கிறுக்கல்கள்

salam... sir ungka warikal super. en manamaarntha walthukal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக