It It கலைமகன் ஆக்கங்கள்: 2025 Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

இரவின் நிறம் | மனங்களைச் சல்லடையாக்கிய நிகழ்வின் நிழல் | கலைமகன் பைரூஸ்

இரவின் நிறம் சிவப்பு

✍️ கவிதை வடிவம் – கலைமகன் பைரூஸ்

இரவின் நிறம் சிவப்பு,
இமைகளை வெட்டிய ஒரு பதட்ட நொடி.
03–08–1990...
நாள் ஒரு துவக்கம்,
முடிவின்றிப் பிழைக்கும் நினைவுகள்.

மஹ்ரிப் ஒலியின் பிறகு,
மோட்சக் குரலில் தோன்றிய
மௌன சத்தங்களின் பயணம்…
ஜவ்பர், ஜுனைதீன், ஆரிப் – அன்ஸார்...
பள்ளிவாயில் படிக்கட்டில் –
காலத்தின் கணக்கின்றி உரையாடல்கள்...

விழிப்புக் குழுக்கள்…
வீதி காத்த உறவுகள்...
கோப்பையாகச் சிந்திய தேநீரில்
உறவுகளின் உருக்கமான உழைப்பு.
அதான் முடிவதற்குள்
இஷா தூண்டியது!

ஆரிப் தொழுவதற்குச் செல்வதுதான்
அவனுக்கே கடைசி தொழுகை என்றார் யாரும்?
தேத்தண்ணீர் சுடுகிறது,
சைக்கிள் பூட்டும் திறக்க மறுக்கிறது,
இச்சுடர்க் கடிகாரம்
சுடும் விபரீதத்தைக் குறிக்கிறது.

திடீரென...
மீரா ஜும்ஆ பள்ளியைத் துளைக்கும்
துப்பாக்கிக் குரல்கள்...
வெடிப்புகள்... துள்ளும் இரத்தங்கள்...
காணாமல் போன இறை அன்பு...

“பள்ளிக்குள் புகுந்து விட்டார்கள்!”
என்ற சப்தத்தில்
உறைகிறது உடல், உருகுகிறது உள்ளம்...
நாங்கள் சைக்கிளோடு ஓடினோம்,
மோதினார் லேன் வழியாக
பாதை காணாத பயத்தில்.

ரஸாக்கியா சந்தியில்
பயங்கர வனவெறி சொற்கள்
வாசலாக புலிகளின் கோரத்தைக் கூறின.
"வீட்டுக்குப் போவதா? பள்ளிக்கா?"
எனத் தயங்கிய நெஞ்சம்
"பள்ளிக்கே!" என்று ஓடியது.

துணிந்த பக்கத்தில்
ஓர் முணுமுணுப்பும்...
மறைந்த ஷஹீத்களின் ஓசையும்...
அழுதுகொண்டே அவன் வந்தான் –
“அன்ஸார்…!” – என் மாமா…
இறக்கைகள் இழந்த புறாவாய்
ரத்தக் கரையில் நனைந்தது உறவு.

ஜுனைதீனின் வாப்பா, ஜவ்பரின் வாப்பா, ஆரிப்…
அனைவரும் வீழ்ந்தார்கள்…
ஆயிரம் கதறல்கள் மீதமாக
அழுகுரலில் பூத்திருந்தது ஊர்.
மொத்த ஊரின் இரத்தம்
ஒரு பள்ளி வாசலில் கசிந்தது.

அல்லாஹ்வின் பெயரில்
சுமந்தவையைச் சுட்டது மனிதக் கோழைத் துப்பாக்கி.
வாயில் முன்னே செங்குருதி...
அடையாளம் இல்லாத உடல்கள்...
பச்சையாகவே
வீழ்ந்தனர் நூற்றி மூன்று பேர்கள்!

அல்லாஹ்வின் வீடு –
இறக்கிறது மரணக் குரல்களால்.
மீண்டும் உதிக்குமா அந்த சூரியன்
மீரா ஜும்ஆப் பள்ளியின் கூரையில்?

மத்தியில் தோண்டிய ஒரே ஒரு கப்ரு
மூடுகிறது நூற்றி மூன்று கண்ணீரால்...
மழை போல் விழும் மக்கள்…
பேரழிவு சாட்சி அந்த இரவில்...

இரவின் நிறம்
மறுநாள் தூங்காதவர்களுக்குப் புரியும்.
அந்த இரவில்...
இரவின் நிறம் – சிவப்பு.


- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்

📘 The Night Was Crimson

✍️ A Poem by Kalaimagan Fairooz

The night turned crimson,
In a fleeting flash that slit through the eyelids.
03–08–1990…
A day began—
And memories that never ended.

After the call of Maghrib,
In the echoes of sacred tones,
Journeyed the unspoken voices…
Jawfar, Junaideen, Aarif – Ansar…
At the mosque stairs,
Endless conversations with no clocks.

Vigil circles…
Streets guarded by kin…
Steaming tea that carried the warmth of struggle.
But before the night closed,
Isha called once more!

Who knew that would be
Aarif’s final prayer?
The boiling water spills…
The cycle lock refuses to turn…
And the glowing clock
Points to an unspeakable horror.

Suddenly—
Gunfire pierced through Meera Jumma Mosque…
Explosions… Spurting blood…
Love lost to shadows…
“They’ve entered the mosque!”—
That shout froze our bodies,
Melted our souls.

We rode with our bicycles,
Down Moathinar Lane
In fear without a road to follow.

At Rasaqqiya Junction,
Words of terror whispered
The horror of the Tigers.
“Home? Or the mosque?”
Our hearts hesitated,
But ran toward the mosque.

A murmur on the daring path…
The silence of fallen martyrs…
He came, in tears—
“Ansar…” – my uncle…
A dove stripped of wings,
Drenched in blood—my kin.

Junaideen’s father, Jawfar’s father, Aarif…
All fell.
A thousand cries
Bloomed in a mourning town.
The town’s lifeblood
Spilled at the mosque’s doorstep.

In the name of Allah,
The coward’s gun fired upon worship.
Blood before the entrance…
Bodies without names…
103 souls fell—green, untouched.

Allah’s house
Echoed with the voice of death.
Will the sun ever rise again
Over Meera Jumma Mosque?

One grave dug at the centre—
Closed with a hundred and three tears.
Rain-like weeping…
That night bore witness to genocide.

The color of that night
Is understood only by those who never slept.
On that night…
The night was crimson.

– With remembrance, Kalaimahan Fairooz

வியாழன், 31 ஜூலை, 2025

நானிருப்பேன் அன்றும்! - கலைமகன் பைரூஸ்

நானிருப்பேன் அன்றும்!

இன்னும் ஒரு தலைமுறையாகும் போது இவன் யாரோ? என்று என் படத்தைப் பார்த்து என் தலைமுறை கேட்க முயலும்? அப்போது இவன் அவன்தான் என எனது உயிர்மூச்சுச் சொற்கள் என்னைச் சொல்லும்...

புதன், 23 ஜூலை, 2025

மழையின் வெந்தடம் – ஹைக்கூ

மழையின் வெந்தடம் – ஹைக்கூ மற்றும் விளக்கம்

சோவெனப் பெய்கிறது மழை
மாடாய் மடிகிறான்
நெற்றியில் சுடுநீர்

கலைமகன் பைரூஸ்

விளக்கம்:

மழை என்பது இயற்கையின் புனித அருள்பொழிவாகத் தோன்றினாலும், இந்த ஹைக்கூவில் அது சற்றே வேறுபட்ட உணர்வோடு வருகிறது.

சனி, 12 ஜூலை, 2025

📜 கலைமகன் கவிதைகள் –புதுமெருகுடன் நாள் 1

1. வாடும் முகங்கள்

வாடும் முகங்கள் தெருவோரம்,
வெறும் கைகளால் வாழ்வுரோகம்;
கண்ணீர் தொட்ட பூமியில்,
கருணையின்றிப் போகலாமா?

விருந்தாக விழும் விழாக்கள்,
விளக்கிழந்த குடிசைகளில் கிடையாது.
வாய்க்கு மட்டுமே உணவு அல்ல,
மனமோடும் பகிர்ந்தல் உணவுதான்.

ஞாயிறு, 15 ஜூன், 2025

பசுமை பேசட்டும்! பாடல் - கலைமகன் பைரூஸ்

🌿 பசுமை பேசட்டும்… நம் பூமி பேசட்டும்!

மரங்கள் பூத்திட, உயிர்கள் வாழட்டும்!
காற்றுகள் வீசியே, பனித்துளி வந்திடும் –
பசுமை பேசட்டும்… நம் பூமி பேசட்டும்!

திங்கள், 28 ஏப்ரல், 2025

பள்ளிகள் காய்ந்து போகின்றன... அங்கலாய்க்கிறேன் நான்!


---------------------
(இது இயக்கம் சார்ந்த பதிவே அல்ல.. )
---------------------

ஜும்ஆக்களின் முழக்கள்
செவிடர்களின் காதுகளில்
அகலவே ஒலிக்கின்றன...
ஜும்ஆவைக் கேட்பதற்கு
இரண்டாம் ரக்ஆத்தில்
வருகின்றார்கள் - அவர்கள்

சனி, 26 ஏப்ரல், 2025

அந்த ஐந்து நாட்கள்! - சிக்கன் குன்யாவா? டெங்குக் காய்ச்சலா?

காய்ச்சலும்  தலைவலியும் தனக்கு வந்தாற்றான் தெரியும்...

கடந்த ஒரு வாரத்திற்கு முன் கடும் காய்ச்சல் காரணமாக, கை - கால்களில் பலமின்றியிருந்ததனால், எனது தம்பி என்னை தனியார் மருத்துவமனைக்கு அந்திப் பொழுதில் அழைத்துச் சென்றார். 

குலைப்பான் காய்ச்சல் போன்றிருந்தது. வைத்தியர் என்னைப் பார்த்துவிட்டு, இரத்த அழுத்தத்தையும் சோதித்துவிட்டு என்னை மாத்தறை போதனா வைத்தியசாலையில் உடனே அனுமதிக்குமாறு கோரினார்.

ஞாயிறு, 30 மார்ச், 2025

தாயின் அன்பிலும் உயர்ந்தவனே, காத்திடு நீயே

 

நாங்கள் ஆடைகள் எடுத்தோம்...

புதுப்புது உணவுகளுக்காக
பொருட்கள் வாங்கினோம்..
உற்றார் உறவினருடன் உல்லாசமாய்
உலாவிவர ஆவன செய்தோம்...

எங்கள் இரத்த உறவுகள்
நாளும் இரத்தம் சிந்தி
உடலங்கள் கற்களுக்குள்ளும்
சிதைந்தும்
உடலங்கள் காணாமற் போயும்
உறவுகள் இழந்தும்
உறக்கங்கள் துறந்தும்
வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டு
இருந்தும் இல்லாமலிருக்கிறார்கள்...

அவர்களின் படங்கள்

செவ்வாய், 4 மார்ச், 2025

எதுவுண்டு சொல்? | மெய்யன் நரடாஜ்

நண்பன் மெய்யன் நடராஜின் அருமந்த கவிதைகளில் ஒன்று. வாசித்துத்தான் பாருங்களேன் நீங்களும்....

--------------------------------------------------

தேனாட மலருண்டு தீயாட விளக்குண்டு

திருந்தாதார் தானாடத் தெருவுண்டு
மீனாட விழியுண்டு முகிலாட வானுண்டு
முளைக்காத விதையாட நிலமுண்டு
கானாட மயிலுண்டு கனியாடக் கிளையுண்டு
கதிராட நீர்கொண்ட வயலுண்டு
தானாடா விட்டாலும் சதையாட லதுவுண்டு
தன்னலங்க ளில்லாதா ரெவருண்டு?
*
அலையாட கரையுண்டு அணிலாடக் கிளையுண்டு

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

நான் நாமாவோம் இக்கணமே - கலைமகன் பைரூஸ்

நானெனும் மமதை நமைக் கொள்ளும்

 நாமெனும் பண்பே நமைப் போற்றும்

எனதே எல்லாம் எனும் குணமும்

 என்றும் அழிவை எமது வழியாக்கும்

 ---------------------------

இயக்கம் இயங்கிடின் நமக்கிலை இடுக்கண்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

அங்கமெங்கும் தொடுவீர் | காதலர் தினக் கவிதை

அங்கங்கே கூடுவீர்

அங்கமெங்கும் தொடுவீர் — கேட்டால்

பங்கமில்லை என்பீர்

சிங்கம் அவன் எனக்கு

தங்கம் அவள் எனக்கு என

வங்கம் எங்கும் பொங்குவீர்


நுங்குத் தண்ணீராய்

வாசப் பன்னீராய்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

ஆழப்பணிசெய்த அதிபரெங்கள் ஹிப்ளர் - கவிதை

 ஆழ்மன தினிலே அறைந்தே உள்ளார்

     அதிபரெம் ஹிப்ளர் அறிவோம் நாமே

காழ்ப்பின் றியேநிறைந் தேயுள்ளார்  கேளீர்

     அஸ்ஸபா அகிலமெங் கனுந்தான் பேசலாச்சே


திட்டந் தானொழுங் காய்ப் போட்டார்

    திக்கெட் டும்புகழ் சேர்த்தார் ஸபாவினில்

இட்டமாய் இன்பணி தான்செய் தாரே

   இதயங் களில்நின் றேயுள் ளாரதிபர்

செவ்வாய், 28 ஜனவரி, 2025

உடல்மெலிந்து உருக்குலைந்து - மெய்யன் நடராஜ்

 

சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

***********************************
கடல்கடந்து இலங்கைவந்து
கடுமுழைப்பைக் கொடுத்தன்று
அடவிபல அழித்தொதுக்கி
அழகொளிரத் தேயிலையை
இடருடனே நாட்டிவிட்டு
இருப்பிடமாய் லயமென்னும்
மடந்தன்னில் வசித்தந்த
மலையகத்தை உருவாக்கி
உடல்மெலிந்து உருக்குலைந்து
உழைத்திட்டத் தொழிலாளர்
கடந்துவந்த பாதையெலாம்
கல்லுமுள்ளு நிறைந்ததுவே
வரலாற்றில்
அழியாத காவியமாய்
அன்றுமின்றும் திகழ்ந்தாலும்

செவ்வாய், 21 ஜனவரி, 2025

பாரதி வாழுகின்றான்! - வாங்கனூர் அ மோகனன்.

பாரதி_வாழுகின்றான்!

(அறுசீர் விருத்தம்)

வேரிலா நாற்றைக் கொண்டு
விண்வரை அகம்வளர்த்தான்!
யாரவன்? நம்பாட்டன்தான்!
அவன்தமிழ் நம்மிடத்தில்
வாரித்தான் வழங்கி வைத்தான்!
வண்ணத்தில் குழைத்தும் தந்தான்!
பாரதிப் புலவன் வாழ்க!
பாருள்ள மட்டும் வாழ்க!
பாட்டென ஒன்றை நாட்டிப்
பைந்தமிழ்ப் படையல் போட்டான்!
ஆட்டமாய் ஆட்டு வித்தான்
அழகிய மயிலை எல்லாம்!
கூட்டமாய்க் குயிலைக் கூட்டி
குக்குக்கூ பாட வைத்தான்!

திங்கள், 20 ஜனவரி, 2025

ஹைக்கூ கவிதை தொடர்பாக கவிக்கோ அப்துல் ரகுமான்

ஹைக்கூ கவிதை தொடர்பாக கவிக்கோ அப்துல் ரகுமான் வழங்கிய செவ்வி

இரவு நேரம். கண்களுக்கு எதுவும் புலப்படாத சூழல். புல்லின் நிழலில் பூச்சி இருப்பதையும் காண முடியாத நிலை. ஆனால், பூசன் ஓசை வழியே பூச்சி இருப்பதை உணர்கிறார். இரவு நேரத்தில் துல்லியமாய் ஒலி, ஒளி, நிழல், இருட்டு என அனைத்தையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கும் கவிஞரின் உள்ளம் இதன்வழி புலனாகின்றது.
கடைப் புத்தகங்கள்
கனமான பொருள்
இளவேனில் காற்று
-கிடோ
இளவேனில் காற்று வேகமாக வீசுகிறது. அதனால் கடையில் புத்தகங்கள் மேல் கனமான பொருள் வைக்கப்பட்டிருக்கிறது. அது காற்றின் வருகையை நமக்கு உணர்த்தும் பொருளாகிறது. நம்மைச் சுற்றி இயற்கையின் வருகையும் மாறுதலும்

சனி, 18 ஜனவரி, 2025

தாய்மொழித் தினத்திற்காக ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன் |

'கலைமகன் கவிதைகள்' எனும் எனது வலைத்தளத்திற்கு வருகைதந்துள்ள உங்களை அன்புகூர்ந்து வரவேற்கிறேன்.

இறையருள் கொண்டு, எதிர்வரும் மாசி மாதம் 21 ஆம் நாள், மீண்டுமாய் எவ்வாண்டும் போல் இவ்வாண்டும் பன்னாட்டுத் தாய்மொழித் தினம் கொண்டாடப்படவுள்ளது.
 
அந்நந்நாளை முன்னிட்டு, எனது (http://kalaimahanfairooz.blogspot.com/)

செவ்வாய், 14 ஜனவரி, 2025

பெயரெச்சம், பெயரடைஎன்பவற்றிற்கான வேறுபாடு என்ன?

பெயரெச்சம் காலம் காட்டும்.

உதாரணம்: சென்ற ஊர். படித்த புத்தகம். வழங்குகின்ற பரிசில்,

வாங்கிய பதக்கம்.

இவற்றுள் சென்ற, படித்த, வழங்குகின்ற, வாங்கிய என வரும் சொற்கள் அனைத்தும் காலம் காட்டுகின்றன.

பெயரடை காலம் காட்டாது. 

திங்கள், 13 ஜனவரி, 2025

2025 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள்

 

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அகிலஇலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.

பெயரடை, வினையடைகள் பற்றி இலக்கண நூலார் கருத்து

தமிழ்மொழி மாபெரும் ஆழி போன்றது. அதனது இலக்கணம் ஆழ்மனதில் பெருங்களியை உண்டாக்க வல்லது. ஆயினும், இன்று இலக்கணத்தைத் துறைபோகக் கற்போர் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றமை துன்பியல் சம்பவமாகும் எனத் துணிகிறேன். 

தமிழ் கற்பிக்கும் சகலரும் ஆழ்கடலில் முத்து எடுக்கப் புகுந்தார்களா? என வினவின், அதற்கான விடை எள்ளளவே என்பது எனது எண்ணப்பாடு. (ஆம், நாம் கற்றவை எள்ளினும் நுண்மையே.)

இலக்கியத்தைக் கற்பிப்பதற்கு ஆழஅகல இலக்கணம் தெரிய வேண்டும்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

தமிழ் வளர்ச்சி என்றால் என்ன?

'கலைமகன் கவிதைகள்' எனும் பெயரில் எனது வலைத்தளம் நடைபோட்டாலும்கூட, தமிழ்மொழி சார்ந்த பிறரது ஆக்க  இலக்கியங்களுக்கும் கைகொடுத்து தமிழுக்கு அணி சேர்க்க வேண்டும் என்பதே எனது எண்ணப்பாடு. நுனிப்புல் மேய்ந்து தமிழைக் கற்கவியலாது என்பதை தமிழ்மீது பற்றுடைய அனைவரும் எண்ணற்பாலது.